பழனி, ஜன.6- தைப்பூசத்திருவிழா, பொங் கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம்முழுவதிலும் இருந்து பக்தர்கள் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக வருகை தந்து கொண்டிருக்கின்றனர். எனவே தமிழக அரசு ஒமைக் ரான் வைரஸ் அச்சுறுத்தல் கார ணமாக புதனன்று பிறப்பித்துள்ள உத்தரவில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை என்ற உத்த ரவை தைப்பூசம் வரை திரும்ப பெற வேண்டும் இந்த தைப்பூச திருவிழாவை நம்பி சிறு, குறு வணிகர்கள் மற் றும் கோயில் கடைகள் தங்களின் வாழ்வாதாரத்தை எதிர்நோக்கி யுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டு களாக கொரோனா என்னும் தொற்றுநோய் காரணமாக வாழ் வாதாரத்தை இழந்த வணிகர் களுக்கு பாதுகாப்பாக உற்ற தோழனாய் இருக்கும் தமிழக அரசு இந்த உத்தரவை மறுபரி சீலனை செய்து அவசரமாக திரும்ப பெற வேண்டும். பழனி நகர அனைத்து வணி கர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் கௌரவ தலைவர் என். ஹரிஹரமுத்து, தலைவர் ஜே.பி. சரவணன், சங்க உறுப்பினர்கள் தமிழக அரசை கேட்டுக் கொண் டுள்ளனர்.