விருதுநகர், அக்.4- விருதுநகரில் உள்ளது கச்சேரி சாலை. இங்குள்ள பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் எதிரே மின் கம்பம் மிகவும் பழுதான நிலையில் இருந்தது. அதில் நகராட்சி தெரு விளக்கு மற்றும் குடி யிருப்புகளுக்கான மின் இணைப்புகள் உள்ளன. இதனால், அதில் தொழிலா ளர்கள் ஏறி தெரு விளக்கை பழுது பார்க்க பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே, விபத்தை ஏற்படுத்தும் நிலை யில் இருந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பத்தை நட வேண்டுமென அப்பகுதி யைச் சேர்ந்த பொது மக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பழைய மின் கம்பத்தின் அருகிலேயே புதிய மின் கம்பம் நடப்பட்டது. நடப்பட்டு, பல மாதங்கள் கடந்த பின்பும், புதிய மின் கம்பத்திற்கு தெரு விளக்கு, மின் இணைப்புகள் மாற்றப்படவில்லை. இந்நிலையில், விருதுநகரின் பல்வேறு பகுதியில் இரும்பு கம்பங்கள் நட்டு வடத்தை அதில் இணைத்து வரும் தனி யார் தொலைத் தொடர்பு நிறுவனத்தினர், பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே உள்ள அந்த மின் கம்பத்தில் வடங்களை இழுக்க பொருட்களை பொருத்தியுள்ளனர். மின் கம்பத்தை, தனியார் நிறுவனம் பயன்படுத்த மின்வாரிய அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினர் என அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.