districts

சாத்தூர் பகுதியில் அரசு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பேருந்துகள்

சாத்தூர், செப்.13- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் தனியார் பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இத னால், பயணிகள் தாங்கள் விரும்பும் ஊர்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். சாத்தூர் பேருந்து நிலையத்தில்  இருந்து விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, கோவில்  பட்டி, தாயில்பட்டி, இருக்கன்குடி,  மாசார்பட்டி, வேடபட்டி, பெரிய நாகலாபுரம், புதூர், விளாத்தி குளம், ஏழாயிரம்பண்ணை, சங்க ரன்கோவில், வெம்பக்கோட்டை, உப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் உள்ளன.  இப்பணியில் அரசு மற்றும் தனி யார் பேருந்துகள் ஈடுபட்டு வரு கின்றன. பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுகிறதா என்பதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகி யோர் கண்காணித்து வருகின்ற னர். ஆனால், சமீபகாலமாக தனி யார் பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழித்தடங்களில் உரிய முறையில் சென்று வருவ தில்லையென பயணிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சாத்தூரின் கிழக்குப்  பகுதியில் உள்ள சில கிராமங்கள் வரை சில தனியார் பேருந்துகள் சென்று விட்டு, பின்பு அங்கிருந்தே பேருந்தை இயக்க வேண்டுமென அரசு சார்பில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், அந்த விதி முறைகளை தனியார் பேருந்து நிர்வாகங்கள் காற்றில் பறக்க விட்டுள்ளதாக பொது மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது, சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து மதியம் 12.30க்கு புறப்படும் தனியார் பேருந்து ஒன்று இருக்கன்குடி, கோட்டூர் வழியாக விருதுநகர் பேருந்து நிலையத்திற்கு மதியம் 1.45க்கு வர வேண்டும். பின்பு, மீண்டும் 2 மணிக்கு புறப்பட்டு அதே வழியில் சாத்தூருக்கு திரும்ப வேண்டும் என்றே அனு மதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  அப்பேருந்து அந்த வழித்தடத்தில் முறையாக இயக்கப்படவில்லை. மேலும், சாத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7.35க்கு புறப்படும் தனியார் பேருந்தானது, மாசார்பட்டிக்கு  செல்ல வேண்டும். பின்பு, அங்கி ருந்து 8.10க்கு புறப்பட்டு மீண்டும்  சாத்தூர் வர வேண்டும். ஆனால்,  அப்பேருந்தை இருக்கன்குடி யிலேயே திருப்பி விடுகின்றனர்.

இதேபோல் மற்றொரு தனியார்  பேருந்து காலை 9.35க்கு சாத்தூரி லிருந்து புறப்பட்டு மாசார்பட்டிக்கு சென்று அங்கிருந்து 10.10க்கு புறப்பட வேண்டும். அப்பேருந்தும் இருக்கன்குடியிலேயே திரும்பு கிறது எனவும் பயணிகள் மற்றும்  பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்ற னர்.   பேருந்துகளை பாதி வழியில் திருப்பி விடுவதால் அப்பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்குச் செல் லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு  சென்று வரும் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பாதிப்படை கின்றனர். இதனால், அவ்வழியாக வரும் சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் மூலம்  பயணம் செய்து உரிய இடங்க ளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்  ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில், விதி முறைகளைப் பின்பற்றி தனி யார் பேருந்துகள் இயக்கப்படு வதில்லை. இருக்கன்குடியில் கூட்டம் இருந்தால், அங்கேயே பேருந்தை திருப்பிக் கொண்டு  சாத்தூர் சென்று விடுகின்றனர். இதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத் துத்துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர்,  தனியார் பேருந்துகள், அனுமதி பெறப்பட்ட கிராமங்கள் வரை உரிய நேரத்தில் சென்று வரு வதை உறுதிப்படுத்த வேண்டும்.  விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் தனியார் பேருந்து களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.