மதுரை, பிப்.27- பிரதமர் மோடி, இரண்டு நாள் பயண மாக செவ்வாய்க்கிழமை மதியம் தமிழ கம் வந்தார். திருப்பூர் மாவட்டம் பல்ல டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவுப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்து வீரபாஞ்சான் டி.வி.எஸ்., லட்சுமி பள்ளியில் நடைபெற்ற சிறு, குறுந்தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்றார்.
பின்னர் சற்று இளைப்பாறி ஓய்வெ டுப்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பசுமலை ‘கேட் வே’ விடுதிக்குச் சென்றார். சுமார் ஒரு மணி நேரம் ஓய்வெடுத்த அவர் விடுதியிலி ருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோவி லுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம், பூஜையில் கலந்து கொண்டுவிட்டு மீண் டும் பசுமலையில் உள்ள உணவு விடு திக்குத் திரும்பினார். புதனன்று தூத் துக்குடி, நெல்லை செல்கிறார்.