கடமலைக்குண்டு, ஜன.3- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராள மான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வரு கிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல் வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவ தால் கடமலை-மயிலை ஒன்றி யத்தில் தேங்காய் உற்பத்தி அதிக அளவில் காணப்படுகிறது. உற் பத்தி அதிகரித்துள்ள காரணத் தால் தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரு கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தேங்காய் ஒன்று ரூ.15 வரை விற்பனையாகி வந்தது. தற் போது ரூ.10-க்கும் கீழ் குறைந்து விட்டது. 1 டன் தேங்காய் 24 ஆயி ரம் ரூபாய் வரை மட்டுமே விற் பனை ஆகிறது. உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க, ஆந்திரா, கர்நாடகா உள் ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்கு மதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். போதுமான விலை இல்லாத போது விவசாயிகள் தேங்காய் களை உடைந்து அதனை வெயி லில் காயவைத்து எண்ணெய் தயாரிப்பிற்காக ஏற்றுமதி செய் வது வழக்கம். ஆனால் தற்போது கொப்பரை தேங்காயின் விலை யும் மிகவும் குறைந்தே காணப் படுகிறது. இதனால், கடமலை-மயிலை ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் குடோன்களில் தேங்காய்கள் தேக்கமடைந்து காணப்படுகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநிலங்களில் இருந்து தேங்காய்கள் இறக்கு மதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தற்போது பாதிப்படைந் துள்ள தேங்காய் விவசாயிக ளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.