districts

img

பணி நிரந்தரம் செய்யக் கோரி அனல்மின் நிலைய ஊழியர்கள் தர்ணா!

தூத்துக்குடி,அக். 26 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் லைன்மேன், உதவி யாளர்கள், தொழில் நுட்ப  பணியாளர்கள் என ஆயி ரக்கணக்கான ஒப்பந்த தொ ழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 18 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 18ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இவர் கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுக ளாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை கள் இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இந்நிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணி புரியும் தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணியின் போது உயிரிழக்கும் ஊழி யர்களுக்கு உரிய நிவார ணத் தொகை வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு குழு ஊழி யர்கள் வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்ட னர்.