districts

அதிகாரம் ஒருவரிடம் குவிக்கப்படுகிறது அக்னிபாதை மிகப்பெரிய முட்டாள்தனம்

திருவனந்தபுரம், ஜன் 30- குடியரசு தலைவர் மாளிகையில் தேவைப்படுவது ரப்பர் ஸ்டாம்ப் அல்ல, சிந்திக்கும், பேசும் குடியரசுத் தலைவர் என  எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறினார். அரசமைப்புக் கோட்பாடுகளிலிருந்து நிர்வாகம் விலகிச் செல்லும் போது அச்சமோ, பாரபட்சமோ இன்றி குடியரசு  தலைவர் தனது மனசாட்சிப்படி செயல்படக் கூடியவராக இருக்க வேண்டும் என்றார். எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர்  வேட்பாளரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தேர்தல்  பிரச்சாரத்தின் துவக்கமாக கேரளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி னார். அதன்படி மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாடு மிக மோசமான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.

பணமதிப்பு நீக்கம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழல். இதன் மூலம் நாட்டில் உள்ள கறுப்புப் பணம் வங்கிகளுக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளையாக்கப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன் 8 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி கோவிட் பாதிப்பிற்கு முன்பு பாதியாக குறைந்தது. நாட்டின் அதிகாரம் ஒரு தலைவரிடம் குவிந்திருக்கும் சர்வாதிகாரம் இந்த நாட்டில் அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்க ளில் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்தின் மீது பெரும் தாக்குதலைத் தொடுக்கிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கி றது. மத்திய அமைப்புகளும் ஆளுநர் அலு வலகங்களும் எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு எதி ராக ஆயுதம் ஏந்தியிருக்கின்றன. தற்போ தைய வாக்குகளின் எண்ணிக்கை எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இல்லை என்ற பிரச்சாரம் நடந்து வருகிறது. இருப்பி னும், நிலைமை மாறி வருகிறது. தேர்தல்  நெருங்கும் போது நிலைமை நிறைய மாறும். கேரள முதல்வருடன் நடந்த சந் திப்பு நம்பிக்கையளிக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஆம் ஆத்மி கட்சி  தனக்கு ஆதரவளிக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.