சிவகாசி, நவ.1- சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்து ராஜபுரம் முதல் நிலை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. சித்துராஜபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சிமன்றத் தலை வர் எஸ்.லீலாவதி சுப்புராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வைரமுத்து வரவேற்று பேசினார். அதில் பிளாஸ்டிக் கேரி பைகளை ஒழித்தல், சுகா தாரத்தை பாதுகாத்தலின் அவசியம் குறித்து ஊராட்சி செயலர் அருள்ராஜ் விளக்கவுரையாற்றினார். பின்பு, அனை வரும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேலும் இதில், ஊராட்சி வார்டு உறுப்பி னர்கள் பி.மங்கம்மாள், மாரியம்மாள், அம்ச வேணி, சத்தியஷீலா ஆகியோர் உட்பட ஏரா ளமான பொது மக்கள் பங்கேற்றனர்.