திருநெல்வேலி, ஏப்.24- பாளையங்கோட்டை மணப்படைவீடு கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கிராமசபை கூட்டங்கள் நடத்த முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டார்.அதன்பேரில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன. பாளை யூனியனுக்குட்பட்ட மணப் படை வீடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டார்.தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நடந்த இந்த கூட்டத்தில் திட்ட இயக்குனர் பழனி, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவி சிவலட்சுமி, வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டி யன், கிராம ஊராட்சிகளின் உதவி இயக்கு னர் ஜான் கென்னடி மற்றும் கவுன் சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அப்போது தாமிரபரணி ஆற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். சாக்கடை நீர் ஆற் றில் கலக்காத வண்ணம் நடவடிக்கை, பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு வீடு தோறும் மஞ்சப்பை வழங்க வேண்டும்.வறுமை இல்லா ஊராட்சி, ஊட்டச்சத்து உள்ள குழந்தை கள் வளர்த்தல், தரமான குடிநீர் வழங்கு வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என உறுதி மொழி எடுத்தனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பேசியதாவது: பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ. 1,000 உதவித்தொகை என பெண்களுக்கு தமிழக அரசு ஏராள மான திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது.நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மகளிர் வாழ்க்கைத்தரம் மேம் படுத்த வாழைத்தாரில் இருந்து கை வினை பொருட்கள் தயாரித்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள மக ளிர் திட்டங்களில் அனைத்து பெண்களும் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.