districts

img

சிக்கல் வட்டார கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க கோரி மறியல்

இராமநாதபுரம், அக்.12- இராமநாதபுரம் மாவட்  டம் சிக்கல் வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வலி யுறுத்தி காலிக் குடங்களு டன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் அம்ஜத் கான் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்துராமு, வி.மயில்  வாகனன் உட்பட பெண்கள் மறியல் ஈடுபட முயன்றனர். இதையடுத்து காவிரி குடிநீர் நிர்வாக பொறியாளர் மகாலிங்கம், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் காவல்துறை டிஎஸ்பி ஆகி யோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சு வார்த்தையில் சிபிஎம் தலை வர்கள் எம்.முத்து ராமு, வி. மயில்வாகனன், தாலுகா செயலாளர் அம்ஜத் கான், கே.பச்சமால், மாவட்ட குழு உறுப்பினர் வி.முருகன், ஆகியோர் பங்கேற்றனர்.  பேச்சுவார்த்தையில் சிக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராம ஊராட்சிகளுக்கு அக்  டோபர் 17 முதல் வாரம் இரண்டு நாள் காவிரி குடி நீர் வழங்க வேண்டும், குடி நீர் வராத மற்ற நாட்களில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும், தண்ணீர் நீர்த்தேக்க தொட்டி இல் லாத கிராமங்களுக்கு சின் டெக்ஸ் மூலம் குடிநீர் வழங்  கப்படும் என எழுத்துப்பூர்வ மாக உறுதி அளிக்கப்பட் டுள்ளது.  தாலுகா குழு உறுப்பி னர்கள் நம்புராஜன், சக்தி வேல் உட்பட சுமார் 800  பெண்கள் உட்பட சுமார் 1000  பேர் கலந்து கொண்டனர்.