விருதுநகர், ஜூன் 5- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிரா மத்தில் கடந்த ஆறு மாதங்க ளாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி 200-க்கும் மேற் பட்டவர்கள் அருப்புக்கோட் டை - கோட்டூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவிருந்தாள் புரம் கிராமத்தில் சுமார் மூவா யிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது. குடிநீர் குழாய் உடைந்து அது சரி செய்யப்படவில்லை; உப்பு நீரும் சரியாகக் கிடைக்க வில்லை எனக் கூறப்படு கிறது. இங்கிருந்து சுமார் மூன்று கி.மீ தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது. தினமும் ரூ.150, ரூ.200-க்கு கூலி வேலை செய்யும் மக்கள் தினமும் ரூ.20 கொடுத்து குடிநீர்பிடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள் ளது இது குறித்த வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளி டமும் மனு அளித்தும் நட வடிக்கை இல்லை. இந்தநிலையில் முறை யான குடிநீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறி திருவிருந்தாள் புரம் கிராமத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மக்கள் காலிக் குடங்களுடன் அருப் புக்கோட்டை - கோட்டூர் சாலையில் மறியலில் ஈடு பட்டனர் ஒரு தகலறிந்து வந்த காவல்துறையினர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வரு வாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஈடு பட்ட அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். திங்கள் மாலைக் குள் குடிநீர் இணைப்பை சீர் செய்து தினசரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறு தியளித்தனர். இதையடுத்து மறியல் விலக்கிக் கொள் ளப்பட்டது.