districts

img

கல்குவாரியை மூட வலியுறுத்தி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி, ஆக. 31 தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா,  கருங்குளம் ஒன்றியத்தி ற்கு உட்பட்ட காரச்சேரி, சேரகுளம் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் மக்களின் உடைமைகளுக்கும் உயி ருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளு க்கு மேலாக  மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கல்குவாரியை மூட வலியுறுத்தி தாசில்தாரிடம் மனு அளித்த இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் தெற்கு காரசேரி கிளைச் செயலாளர் முருகேசனை அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வரும் கல்குவாரி நிர்வாகம் காவல் துறையினரை வைத்து மிரட்டியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூட வலியு றுத்தியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தெற்கு காரச்சேரி கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  இதில் வாலிபர் சங்க  மாவட்ட பொருளாளர் மனோஜ் குமார், கருங் குளம் ஒன்றிய செயலாளர் கொம்பையா ,காரச்சேரி தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.