சிபிஎம் கொடியேற்று விழா
திண்டுக்கல். ஜுலை.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேடசந்தூர் தாலுகா வெள்ளையக்கவுண்டனூரில் முன்னாள் கிளைச்செயலாளர் பெரியசாமி நினைவாக கொடி யேற்றுவிழாவும், தெருமுனைக்கூட்டமும் வெள்ளியன்று நடைபெற்றது. மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். ஒன்றி யச்செயலாளர் பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.கிருஷ்ணமூர்த்தி ,ஒன்றியக்குழு உறுப்பினர் சவடமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். (நநி)
உடைந்து போன வாறுகால்களை சீரமைத்திடுக!
விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்
விருதுநகர், ஜூலை.15- உடைந்த நிலையில் உள்ள கழிவு நீர் வாறுகால்களை புதுப்பிக்க வேண்டும் என்று விருதுநகர் நக ராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் நகராட்சியின் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் தனலெட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு : அனைத்து வார்டுகளிலும் கழிவு நீர் வாறுகால் கட்டும் பணிக்காக திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட ஒரு வார்டில் மட்டும் பொது நிதியில் பணி செய்ய பொருள் கொண்டு வரப்பட்டுள் ளது என சிபிஎம் உறுப்பினர் ஜெயக் குமார், காங்கிரஸ் உறுப்பினர் பால் பாண்டி ஆகியோர் கேள்வி எழுப்பி னர். மிகவும் உடைந்து விழும் நிலையில் உள்ளதால் இப்பணி எடுக்கப்பட்டுள் ளது என தலைவர் பதில் கூறினார். பாதாளச் சாக்கடை நீர் உந்து நிலை யத்தில் உள்ள மோட்டார் பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் அனைத்து மேன் ஹோலிலும் சாக்கடை நீர் நிரம்பியுள்ளது. மேலும், குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது என திமுக உறுப்பினர் முத்துராமன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், ஒரு வாரத்தில் மோட்டார் சரி செய்யப் படும் என்றார். மின் விளக்குகள் சரிவர பழுது நீக்கம் செய்யப்படவில்லை.
எனவே, ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் தெரிவித்தும் ஏன் நடவடிக்கை இல்லை? என உறுப்பி னர்கள் வெங்கடேஷ், மதியழகன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, தற்போது அந்த ஒப்பந்தக்காரர் நன்றாக பணி செய்கி றார். மேம்பாலத்தில் மட்டும் சில விளக்குகள் எரியவில்லை. அதையும் சரி செய்து விடலாம் என தலைவர் பதில் கூறினார். குப்பை அள்ளும் வாகனங்கள் 3 மற்றும் 5 ஆவது துப்புரவு பிரிவுகளில் இல்லை. இதனால் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. மின்சார வாரியத்தால் வெட்டிப் போடப்படும் மரக் கிளைகளும் அப்படியே சாலை யோரத்தில் கிடக்கிறது எனவும் நகராட்சி வாகனங்கள் சில தனியா ருக்கு சொந்தமான இடத்தில் ஏன் நிற்கிறது?. அதை நகராட்சி இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் என சிபிஎம் உறுப்பினர் ஜெயக் குமார் தெரிவித்தார். இதையடுத்து பேசிய ஆணையா ளர், குப்பை வாகனங்கள் பழுது நீக்கம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பில் தொகை நாளை வழங்கப்பட்டுவிடும். மேலும், வாகனங் கள் நகராட்சி இடத்தில் நிறுத்த அனைவருக்கும் அறிவுறுத்தப்படும் என பதில் கூறினார். குப்பை வண்டிகளுக்கு எத்தனை பேட்டரிகள் வாங்கியுள்ளீர்கள். தற்போது 37 வண்டி தான் இயங்கு கிறது. ஆனால், 57 வாகனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள் ஏன்?. 17 சார்ஜர் வாங்க ஏன் ரூ.2 லட்சம் செலவு ஆகிறது? என உறுப்பினர் முத்து ராமன் கேள்வி எழுப்பினார். பழுது நீக்கம் செய்யப்படும் குப்பை வாகனங்களுக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என ஆணையாளர் பதில் கூறினார். இவ்வாறாக விவாதம் நடை பெற்றது.
கணியன் பூங்குன்றனாருக்கு மணிமண்டபம் அமைக்க முதல்வருக்கு மனு
சிவகங்கை,ஜூலை 15- தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் கிருஷ்ண மூர்த்தி தமிழக முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: அய்யன் திருவள்ளுவரை போன்று சங்க காலத்தில் தோன்றிய கணியன் பூங்குன்றனார் என்ற சங்க காலப் புலவர், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்ற பாடல் மூலம் மனிதநேயத்தை பறைசாற்றினார். சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டி என்ற கிராமம் ஆகும். வரலாற்று ஆய்வாளர்களாலும் கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊர் மகிபாலன்பட்டி என்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் 1974ஆம்ஆண்டு மறைந்த தமிழறிஞர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களுக்கு மகிபாலன்பட்டியில் சிலை எழுப்பப்பட்டு கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலை அருகில் கணியன் பூங்குன்றனார் எழுதிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முழு பாடல் தொகுப்பும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு அக்கல்வெட்டு கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. எனவே சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு அவர் பிறந்த ஊராகிய மகிபாலன்பட்டியில் சிலை எழுப்பியும் வரலாற்று மணிமண்டபம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கல்வி கற்கும் முறை : தேனி ஆட்சியர் ஆய்வு
தேனி ஜூலை.15- தேனி மாவட்டம், வீர பாண்டி பேரூராட்சிக்குட் பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்க ளுக்கு கல்வி கற்கும் முறை யினை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தார் . குழந்தைகள் கற்றலை பெறுவதற்கு உதவியாக பள்ளிக்கல்வித்துறையின் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் கற்றல் நிலைக்கேற்ப கற்பித்தல் என்ற அணுகு முறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. பாடவாரியாக உருவாக் கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்கு தெரிந்த கற்றல் நிலையி லிருந்து படிப்படியாக தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள் ளது. அதன்படி, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025-ஆம் ஆண்டிற் குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும், எழுதவும் அடிப்படைக் கணக்குகளைக் செய்யவு மான எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது உறுதி செய்யப்படுகின்ற வகையில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியர் முரளீதரன் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, பள்ளியில் சுகாதாரப் பணி கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.