districts

img

இராமநாதபுரம் வாரச்சந்தை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக

இராமநாதபுரம்,மே 16- இராமநாதபுரத்தில் வாரச்சந்தை பேருந்து நிலை யம் அருகில் செயல்பட்டு வருகிறது. தற்போது பேருந்து நிலையம் இடிக் கப்பட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுமானப்பணி கள் துவங்க உள்ளது. இந்நிலையில்  சந்தைக்கு மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களை தேர்வு செய்து,  மாவட்டத்தின் பிற பகுதி யில் இருந்து வியாபாரம் செய்யக்கூடிய சந்தை வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கவும் தொடர்ந்து அவர்கள் வியா பாரம் செய்வதற்கு இடை யூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் உரிய முறையில் தலையீடு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநா தபுரம் நகராட்சி ஆணையா ளர்  மற்றும் இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் ஆகி யோரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது . இதில் சிஐடியு முறை சாரா தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் இரா.முத்துவிஜயன்,  நகர் பொறுப்பாளர்  என்.ராம மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா  செயலாளர் பி. செல்வராஜ் மற்றும் சந்தை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர் கள் நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையா ளர்  ஆகியோரை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கிக் கூறினர்.