districts

img

கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மக்கள் மருத்துவ உதவி மையம் தயார் என மனு

நாகர்கோவில், ஜன.11- கன்னியாகுமரி மாவட்டத்தில் கொ ரோனா பெருந்தொற்று வேகமெடுக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து பணியாற்ற மக்கள் மருத்துவ உதவி மையம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது  கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய் பரவல் தினம், தினம் அதிகரித்து வரு கிறது. ஆசாரிபள்ளம் மருத்துவமனையி லும் இதர அரசு மருத்துவமனைகளிலும் அவசர பிரிவு ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும், தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும், தொற்று ஏற்பட்ட வர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுத்தாமல் உரிய ஆம்புலன்ஸ் வசதி செய்திட வேண்டும். தொற்று ஏற்பட்டு மூடப்பட்டுள்ள பகுதிக ளில் வாழும் மக்களுக்கும் உணவுக்கான வசதி ஏற்படுத்த வேண்டும், மூன்றாவது தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்துவது சம் பந்தமான முழு தகவல்களை தினந்தோ றும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தொற்று நோய் பரவலை தடுப்ப தற்கும் சிகிச்சை, போக்குவரத்து உணவு. மருந்து மற்றும் அனைத்து அவசர தேவைகளுக்கான செலவுத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வில் கூறப்பட்டுள்ளது.  மேலும் கொரோ னா தொற்று மீண்டும் பரவும் இச்சூழலில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் மருத்துவ உதவி மையத்தின் கன்வீனர் கே. தங்க மோகன், மருத்துவர்கள் இளஞ்செழியன், சுபத்ரா செல்லதுரை மற்றும் என்.உஷா பாசி, எம்.ஏ. உசேன், மலைவிளை பாசி, என்.எஸ்.கண்ணன், எஸ் அந்தோணி, ரெக்சிலின் ஜோசப், பிரமிளா பர்மிளா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.