விருதுநகர், ஜூன் 27- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் சிவகாசி மாநகரட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். அருப்புக்கோடடை, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதி களில் நடைபெறும்தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டம். விருது நகர் நகராட்சி பகுதியில் உப்பு சுவை யுள்ள குடிநீரை வழங்க கூடாது. அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி, தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும். நகராட்சியில் துப்பு ரவு பணிகளை தனியாரிடம் ஒப்ப டைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி பெருந்திரள் மக்கள் இயக்கப் போராட்டம் நடை பெற்றது. விருதுநகர் நகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு வாலிபர் சங்க நகரச் செய லாளர் தீபக்குமார், சிஐடியு கன் வீனர் பாலமுருகன், மாதர் சங்க நகரத் தலைவர் ஜெயா ஆகியோர் தலைமையேற்றனர். துவக்கி வைத்து நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் பேசினார். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். விஜயபாண்டி, மாற்றுத் திறனாளி கள் சங்க மாவட்ட துணைத் தலை வர் கே.ஆரோக்கியராஜ், வர்த்தக சங்கத் தலைவர் சேசையா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் என்.உமா மகேஸ்வரி ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்.பாலசுப்பிர மணியன் கன்டன உரையாற்றி னார். மேலும் இதில், சிபிஎம் நகர் செயலாளர் எல்.முருகன், சிஐடியு மாவட்ட உதவித் தலைவர் எம்.சாராள், வாலிபர் சங்க நகர் தலை வர் எம்.பொன்னுப்பாண்டி, மாதர் சங்க செயலாளர் ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகாசி மாநகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட் டத்திற்கு சிஐடியு கன்வீனர் இ. பழனி, வாலிபர் சங்க நகரத் தலை வர் மரியராஜ், மாதர் சங்க நகர் செயலாளர் அன்னலட்சுமி, மாற் றுத் திறனாளிகள் சங்க தலைவர் வதிஸ்டராஜன் ஆகியோர் தலை மையேற்றனர். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு ஒன்றிய கன்வீனர் மோகன்ராஜ், வாலிபர் சங்க மாவட் டக்குழு உறுப்பினர் பாண்டீஸ்வ ரன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். துவக்கி வைத்து மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட செயலா ளர் கே.நாகராஜ் பேசினார். முடி வில் சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் கே.முருகன் கண்டன உரை யாற்றினார். மேலும் இதில் சிபிஎம் நகர் செயாளர் ஆர்.சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன், ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் மகேந்திரகுமார் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்றனர். அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு கன் வீனர் தமிழ்செல்வராஜ், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலை வர் நடராஜன், மாதர் சங்க தலை வர் மணிமேகலை ஆகியோர் தலை மையில் போராட்டம் நடைபெற் றது. துவக்கி வைத்து மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.லட்சுமி பேசினார். முடிவில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் பி. ராமர் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிபிஎம் நகர் செய லாளர் எஸ்.காத்தமுத்து, நகர் மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணி யன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட பொருளாளர் பி.அன்புச் செல்வன், திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாத்தூரில் சிஐடியு கன்வீனர் சீனிவாசன், வாலிபர் சங்க நகர் செயலளர் முத்துகணேஷ், மாற்றுத் திறனாளி சங்கத்தின் கைலாசம் ஆகியோர் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. துவக்கி வைத்து சிஐடியு சாலைப் போக்கு வரத்து சங்க மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் பேசினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். தெய்வானை, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் மனோஜ்குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடி வில் பட்டாசு தீப்பெட்டி தொழிலா ளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சி. பாண்டியன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் சிபிஎம் நகர் செயலாளர் பெத்தராஜ், வாலிபர் சங்க நகரத் தலைவர் சண்முக முனீஸ்வரன், பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருவில்லிபுத்தூர்
இராஜபாளையம் நகராட்சி முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு வாலிபர் சங்க நகரச் செயலா ளர் செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். மாதர் சங்க நகர செய லாளர் மேரி முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாரத் பேசினார். மாதர் சங்க நகர தலை வர் மைதிலி, சிஐடியு கன்வீனர் சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளி கள் சங்க நகர தலைவர் பாக்கிய ராஜ் உள்ளிட்டோர் பேசினர். சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் கணேசன் நிறைவுரையாற்றினார். இறுதியாக பொதுமக்களின் மனுக் கள் நகராட்சி மேலாளரிடம் வழங் கப்பட்டது. திருவில்லிபுத்தூர் நக ராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்றது. இயக்கத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் வீரச தானந்தம், மாவட்ட நிர்வாகி பிச்சைக்கனி மாற்றுத்திறனாளிகள் சங்க தாலூகா பொருளாளர் வேல் சாமி, மாதர் சங்க நகர செயலாளர் ரிமோட்டா உள்ளிட்டோர் தலைமை தாங்கினார் கோரிக்கைகளை விளக்கி வாலிபர் சங்க நகர செய லாளர் பிரபு, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரேணுகாதேவி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் அய் யக்காள் உள்ளிட்டோர் பேசினர். நிறைவு செய்து சாலைப்போக்கு வரத்து சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் திருமலை பேசினர் சிபிஎம் நகர செயலாளர் ஜெயக் கமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.