இராமநாதபுரம், பிப்.7- ஒன்றிய மோடி அரசு பட்ஜெட் டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த ஆண்டை விட 90 கோடி ரூபாய் குறைத்துள்ளது.100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை யும் குறைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கடும் ஊனம் உள்ளவர்களுக்கு ரூ.300 உத வித்தொகை மட்டுமே ஓன்றிய அரசு தருகிறது. இதனால் மாற்றுத்திற னாளிகளின் வாழ்வாதாரம் கடு மையாக பாதிக்கப்படுகிறது. ஒன் றிய பட்ஜெட்டில் நிதிக்குறைப் பைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சிக்கல் நகரில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தாலுகா தலைவர் ஜே. நூர்முகம்மது தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஏ.முகம்மது சுல்தான், மாவட்ட செயலாளர் எம். இராஜ்குமார் ஆகியோர் பேசினர். ஜலீல், ராமலட்சுமி, பச்சை உட்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தபால் நிலை யம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளி கள் சங்கத் தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். செயலா ளர் ராஜேஷ் முன்னிலை வைத்தார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் முருகன், கணேசன், அங்குதன் ஆகியோர் பேசினர். மாவட்டத் துணைத் தலைவர் முத்துராமலிங் கம் கமுதி தாலுகா தலைவர் சந்தி ரன், செயலாளர் ஸ்டாலின், முத்து மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.