மதுரை, நவ.2- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூ ரத் தாக்குதலை கண்டித்தும் போர் நிறுத்தத்தை வலி யுறுத்தி ஐநா தீர்மானத்தை ஆதரிக்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் தமிழ் நாடு அனைத்து வகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக் கான சங்கத்தின் மதுரை மாந கர் மாவட்டக் குழு சார்பில் புதனன்று ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவித் தலைவர் ஏ.பாண்டி தலைமை வகித் தார். மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜ், அமைப் பின் மாவட்டச் செயலாளர் ஆ.பாலமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜேந்தி ரன், மாவட்ட இணைச் செய லாளரும் மாமன்ற உறுப்பி னருமான டி.குமரவேல், முரு கேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.