கடமலைக்குண்டு, டிச.21- தேனி மாவட்டம், மயிலாடும்பாறை கிராமத்தில் குடியிருந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆத ரவற்ற குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மயி லாடும்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடை பெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்த ரபாரதம் தலைமை வகித்து, அத்தியாவசிய பொருட் களை வழங்கினர். ஊராட்சி துணைத் தலைவர் நாக ராஜ், வட்டார வளர்ச்சி துணை அலுவலர் காளியப்பன் ஊராட்சி செயலாளர் ஆங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தர பாரதம் கூறுகையில், மயிலாடும்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்ற உத்தர வுப்படி வீடு இடிக்கப்பட்டு தற்போது வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்திறனாளியான ஜெயபால் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கி யும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங் கப்பட்டது. இதேபோல கணவர் இறந்து மூன்று குழந்தையுடன் சிரமப்பட்டு வரும் பனிமலர் என்ப வருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது .மேலும் இவருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைச் சான்றிதழ் பெறுவதற்கு மாவட்ட ஆட்சி யர் முரளீதரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.