districts

img

ரேசன் கடைகளில் தனிமனித இடைவெளியின்றி கூடும் மக்கள்

கடமலைக்குண்டு, ஜன.10- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலம் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.  கொரோனா தடுப்பு நட வடிக்கையாக அதிக அளவில்  கூட்டம் கூடுவதை தடுக்கும் வகை யில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்கள் வழங்கி நாள்தோறும் குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகின்ற னர்.  இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வாங்கு வதற்கு ஒரே நேரத்தில் ரேஷன் கடைகள் முன்பாக பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி ஒன்று கூடுகின்றனர். இதில் பெரும் பாலானோர் முகக் கவசம் அணி வதில்லை. இதனால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்கும் அபா யம் உள்ளது. காவல்துறையினர் யாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடாததால் ரேசன் கடை பணி யாளர்களால் கூட்டம் கூடுவதை தடுக்க முடியவில்லை.  எனவே சம்பந்தப்பட்ட அதி காரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன் றிய ரேசன் கடைகளில் காவல் துறையினரை பாதுகாப்பு பணி களில் ஈடுபடுத்தி, பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட பாது காப்பு நடவடிக்கைகளை கடை பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.