திண்டுக்கல்லில் இன்று செஞ்சட்டை பேரணி கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு
திண்டுக்கல், மே 4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக காரல் மார்க்ஸ் 205வது பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் லில் மாவட்ட அளவிலான செஞ்சட்டை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் மே 5 வெள்ளியன்று நடைபெறுகிறது. மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர். வெள்ளி யன்று மாலை 4 மணிக்கு பேகம்பூரில் உள்ள ஏ.பி. சிலை முன்பிருந்து பேரணி புறப்படுகிறது. மணிக்கூண்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இடையக்கோட்டை பகுதியில் தொடர் மின்தடையால் மக்கள் அவதி
ஒட்டன்சத்திரம், மே 5- ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதி களுக்கு சின்னக்காம்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தூரல் மழை பெய்த தால் 8 மணி நேரம் வரை இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். நேற்று காலை முதல் மாலை வரை மின்தடை செய் யப்பட்டது. இதனால் மின்சாரத்தை நம்பி இயங்கி வரும் லேத் மற்றும் கடைகள் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் மின்சாரம் இல்லாததால் விவசாய மின் மோட்டார்கள் இயங்காததால் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சமுடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர். இது குறித்து மின்சார வாரிய அதிகாரியிடம் கேட்ட போது, பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்ற பதிலை மட்டும் கூறுகிறார்கள். இடையக்கோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமப்பகு திகளுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்சார வாரியம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவர் பலி
ஒட்டன்சத்திரம், மே 5- ஒட்டன்சத்திரம் அருகே வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலன் அளிக்கா மல் பள்ளி மாணவர் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கள்ளி மந்தையம், வல்லக்குண்டாபுரத்தைச் சேர்ந்த சின்னராஜ் & செவ்வாந்தியம்மாள் தம்பதி மகன் நந்தகுமார்(வயது 9). இவர் நீலகவுண்டன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். நந்தகுமார் உணவு சாப்பிட்டவுடன் செரிமான பிரச் சனை ஏற்பட்டு அடிக்கடி வாந்தி எடுத்துவந்துள்ளான். கோயமுத்தூர், பழனி ஆகிய ஊர்களில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை. நேற்று முன்தினம் உணவு சாப்பிட்டவுடன் நந்தகுமார் வழக்கம்போல வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே நந்தகுமாரை ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தபோது ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கள்ளிமந்தையம் காவல்நிலையத்தில் சின்னராஜ் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, சார்பு ஆய்வாளர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவர் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆண்டிபட்டி அருகே கிணற்றில் மூழ்கி கோவை ஓட்டுநர் பலி
தேனி, மே 4- ஆண்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த கோவை யை சேர்ந்த ஓட்டுநர் பலியானது தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கருப்பையா மகன் ராஜகோபால் (வயது 29). இவர் ஆட்டோ ஓட்டிவந்தார். இவ ரது உறவினர் செல்வகுமார் ரத்தினபுரியில் வசித்து வரு கிறார். செல்வகுமாரின் சொந்த ஊர் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ரெங்கநாதபுரம் ஆகும். அங்கு தனது குழந்தை களின் காதணி விழா நடத்தினார். இதற்கு ராஜகோபால் சென்றிருந்தார். அப்போது அருகில் இருந்த கிணற்றில் குளிக்க சென்றவர் திடீரென நிலை தடுமாறி கிணற் றுக்குள் விழுந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜகோபால் இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சம் இழந்த பெண் சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை
தேனி, மே 4- ஆன்லைன் மோசடியில் ரூ.5.70 லட்சத்தை இழந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், உத்தமபாளையம் தென்னகர் காலனியைச் சேர்ந்தவர் சற்குணம் மகள் சங்கீதா(23). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரு கிறார். இந்நிலையில் பகுதிநேர பணி இருப்பதாக கூறி கடந்த மார்ச் 31 ஆம் தேதி இவருக்கு சமூகவலைதளம் மூலம் லிங்க் வந்துள்ளது. அதில் பிரபலமான வர்களின் இன்ஸ்ட்கிராம் முகவரியை பின் தொடர்ந்து அதன் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினால் ஒவ்வொரு ஐ.டி.க்கும் ரூ.50 வழங்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது. இதை செய்து முடித்ததும் சங்கீதா வின் வங்கிக் கணக்கில் போனஸ் தொகை யாக ரூ.150 வரவானது. இதனைத் தொடர்ந்து முன்பணம் செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சங்கீதா கடந்த ஏப்ரல் 1முதல் அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குக்கு பலகட்டமாக ரூ.5.70லட்சம் அனுப்பி உள்ளார்.ஆனால் தனக்கு பணம் எதுவும் தராமல் தொடர்ந்து பணம் அனுப்புமாறு கேட்டதால் தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்தார்.இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் காவல்நிலை யத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து ஆய்வாளர் அரங்கநாயகி விசாரிக்கிறார்.
இராமநாதபுரத்தில் இருபாலர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைத்திடுக!
அரசுக்கு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை
இராமநாதபுரம், மே 4- இராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் இருபாலர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று தமிழக அர சுக்கு இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செய லாளர் எம்.வசந்த் சுர்ஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தின் தலை நகரான இராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன. அரசு இருபாலர் அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளி இல்லை. இங்கு இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், அர சியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இருந்த போதிலும் இந்த கோரிக்கை அரசின் கவனத்திற்கு எட்டாத வண்ணம் இங்குள்ள தனியார் பள்ளிகள் கவனமு டன் இந்த விவகாரத்தை கையாண்டு வரு கின்றன. ஏனெனில் அரசு மேல்நிலைப் பள்ளி நகரில் அமைந்தால் தங்களது பள்ளி களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து விடுமே என்ற காரணத்தால் இதை செய்கின்றன. இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவ லர் பாலமுத்துவிடம் கேட்டபோது ,இராம நாதபுரத்தில் இடம் இல்லை என்பதால் அரசு பள்ளி இல்லை என்று கூறினார். இருந்த போதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே பல ஏக்கர் நிலத்தை தனியார் பள்ளி ஒன்றுக்கு 90 ஆண்டு குத்தகைக்கு கொடுத்துள்ளது எப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்லா மல் நழுவினார். அவர் பட்டினம்காத்தான் பள்ளியில் செயல்பட்டு வரும் துவக்கப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு அங்கு இருபாலர் மேல்நிலைப்பள்ளி துவக்க முந்தைய ஆட்சியரிடம் வலி யுறுத்தப்பட்டதாகவும் ஆனால் அது பரிசீல னையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அரசுப்பள்ளியில் படித்தவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள் ஒதுக்கீடு வழங் கப்படுகிறது. இங்கு அரசுப்பள்ளி இல்லா ததால் மாணவ, மாணவியர்கள் அந்த வாய்ப்பை இழக்கின்றனர். எனவே இராம நாதபுரத்தில் இருபாலர் பயிலக்கூடிய அரசு பள்ளியை உடனே அமைக்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: இருவருக்கு தலா 20 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர், மே 4- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதி மன்றம் தீர்ப்பளித்தது. சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சோனை (26)இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (26) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார் இது தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் எம்.புதுப்பட்டி போலீ ஸார் 21.1.2019 அன்று இருவரையும் கைது செய்தனர். இவ்வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, புதன்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பகவதி யம்மாள், பாலியல் தொல்லை கொடுத்த முத்துசோனை மற்றும் சுப்புராஜ் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டு சிறைத் தண்டனையும், மேலும் முத்துச்சோனைக்கு 12 ஆயிரம் அபராதமும்,சுப்புராஜிற்கு 7 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமி ழக அரசு சார்பில் 5 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.
மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் தேனியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தேனி, மே 4- ஊரகப் பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிளுக்கான மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வெளியீட்டார் . ஊரகப்பகுதிகளில் 10 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்களும், நகராட்சி பகுதிகளில் 176 வார்டு உறுப்பி னர்களும், பேரூராட்சிப்பகுதிகளில் 335 வார்டு உறுப்பி னர்களும் என மொத்தம் 521 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலரின் அலுவலகம், தேர்தல் நடத்தும் அலுவ லரின் அலுவலகம் மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் வைத்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பி.மதுமதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை
விருதுநகர், மே 4- விருதுநகர் அருகே சூலக்கரை துணை மின் நிலையத்தில் ஏப்ரல் 6 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான, சூலக்கரை கிராமம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கம், ஆயுதப்படை குடியிருப்பு, கூரைக்குண்டு, மாத்த நாயக்கன்பட்டி, மாடன் நகர், அழகாபுரி, மீசலூர், கே. செவல் பட்டி, குல்லூர்சந்தை, தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என மின்வாரி யம் அறிவித்துள்ளது.
ஆண்டிபட்டியில் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தவர் கத்தியால் குத்திக்கொலை
தேனி, மே 4- ஆண்டிபட்டியில் மகளிர் காவல்நிலை யத்திற்கு விசாரணைக்கு வந்த காதலன் மற்றும் மனைவியை, கணவன் கத்தியால் குத்தியதில் காதலன் பலியானார் .படுகாய மடைந்த மனைவி தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறை ஒன்றியம் கோம்பைத்தொழு கிராமத்தை சேர்ந்தவர் தீபாவளி. கூலித்தொழிலாளி யான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்ற நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிரா மத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும், தீபாவளியின் மனைவி சங்கீதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. ஈஸ்வரனுக்கும் திரு மணம் முடிந்து மனைவி குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரது உறவு குறித்து தெரிந்ததும் தனது மனைவியை யும், ஈஸ்வரனையும் பலமுறை தீபாவளி கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கீதாவும், ஈஸ்வரனும் ஊரை விட்டு ஓடி, மயிலாடும்பாறை காவல் நிலை யத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த னர். இந்த பிரச்சனை குறித்து ஆண்டிப் பட்டி அனைத்து மகளிர் காவல் நிலை யத்திற்கு விசாரணைக்கு செல்லும்படி ஜோடி மற்றும் தீபாவளியை அனுப்பி விட்டனர். சரமாரி கத்திக்குத்து அதன்படி வியாழனன்று காலை சங் கீதாவும், ஈஸ்வரனும் மகளிர் காவல்நிலை யம் செல்வதற்கு ஆணிடிப்படி பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு ஏற்க னவே காத்திருந்த தீபாவளி, ஜோடியாக இருவரும் இறங்குவதை கண்டவுடன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஈஸ்வரனையும், சங்கீதாவையும் சரமாரி யாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் இருவரும் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் தஞ்சமடைந்தனர். இருவரையும் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியி லேயே ஈஸ்வரன் உயிரிழந்தார். காயம டைந்த சங்கீதா சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டுள்ளார். இருவரையும் குத்திய தீபாவளி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.இது குறித்து ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரு கிறார்கள்.
ஆளுநர் வேலையை தவிர அனைத்து வேலைகளையும் செய்கிறார் ஆர்.என்.ரவி
அமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்
சென்னை, மே 4- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரி வித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதி யாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பார தம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடு கிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அதில், “கம லாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.” “ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடு கிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கி றார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்து விட்டு பேச வேண்டாம். எடுத்துக்கொண்ட பத விப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார். “மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அர சின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதி காரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவி யில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது” என்று சாடியுள்ளார்.