தருமபுரி, ஜன.28- பண்டஅள்ளி ஊராட்சியில் அடிப் படை வசதிகள் செய்து கொடுக்க வலியு றுத்திய மக்களிடம் துணைத் தலைவரின் கணவர் மற்றும் மகன் மிரட்டிய சம்பவம் கிராம சபை கூட்டத் தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பண்ட அள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ள டக்கி 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தேர்தலில், பண்டஅள்ளி ஊராட் சிக்கு எஸ்டி பிரிவினர் போட்டியிடும் ஊராட்சியாக மாவட்ட நிர்வாகம் அறி வித்திருந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெற்று ரவி என்பவர் வெற்றி பெற்றார். ஆனால் சிலர் ரவி ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும் அவரிடம் எஸ்டி ஜாதி சான்றிதழ் கிடையாது என வழக்கு தொடர்ந்த அடிப்படையில் தலைவர் பதவி பறிபோனது. இது தொடர்பான வழக்கும் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இல்லாத காரணத்தினால் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப் பாட்டில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வா கத்தில் துணைத் தலைவர் ஜமுனா மாதப்பன் ஆவணங்களில் கையெ ழுத்து இடவும் வங்கி கணக்குகளை பராமரிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், துணை தலைவர் ஜமுனாவிற்கு பதிலாக அவருடைய கணவர் மாதப்பனும் அவருடைய மகன் விக்னேஷ் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குடியரசுதின கிராம சபை கூட்டம் நடை பெற்ற போது வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் தங்களுக்கு எந்த வித அடிப்படை வசதிகளும் கிடைப்ப தில்லை என்று தெரிவித்தவுடன் துணை தலைவரின் கணவர் மற்றும் மகன் பொதுமக்களிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நான் தான் தலைவர் என துணை தலை வரின் கணவரும் மகனும் நிர்வாகத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வரு கின்றனர் என்றும் குற்றம் சாட்டினர் எனவே, பண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகத்தில் துணை தலைவர் மகன் தலையிடை தடை செய்து மறு தேர்தல் நடத்தி ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுத்து பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.