தேனி, மே 20- தேனியில் அகல ரயில்பாதை திட்டத் திற்கு தோண்டப்பட்ட குட்டையில் மூழ்கி 2 பள்ளி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் சிவராஜா மகன் சிவசாந்தன்(12). கண்ணாத்தாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் வீரராகவன்(12). இருவரும் 7 ஆம் வகுப்பில் ஒன்றாக படித்து வந்தனர். தற்போது கோடை விடு முறை என்பதால் இருவரும் வெள்ளிக்கிழமை ரயில் நிலைய பகுதிக்கு விளையாட வந்தனர். அங்கு அகல ரயில் பாதை பணிக்காக தோண்டப்பட்ட ராட்சத பள்ளத்தில் தண்ணீர் அதிகளவில் தேங்கிக்கிடந் தது. இதில் இருவரும் குளித்த போது மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இரவு வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல இடங்களி லும் தேடினர். இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை யில் இருவரது உடலும் தண்ணீரில் மிதந்தன.தீயணைப் புத்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நீர்த்தேக்கத்தின் ஆபத்து குறித்து சமூக ஆர்வலர்கள், பலமுறை சுட்டிக்காட்டியும் ,நாளிதழ்களில் செய்தி வெளியிட்டும் ரயில்வே நிர்வாகம் மந்தமாக உள்ளது ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கா ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .இது குறித்து தேனி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.