தேனி, மார்ச்.14- தேனி ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிக ளுக்கு ரூ.26,37,000 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் வழங்கினார். இக்கூட்டத்தில், முதல மைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து , வருவாய் துறையில் பணி புரிந்த முது நிலை வருவாய் ஆய்வாளர் (லேட்) சேக் ஒலி கொரோ னா நோய்த்தொற்று தடுப்பு பணியின் போது, கொரோ னாவால் பாதிக்கப்பட்டு உயி ரிழந்தமைக்காக அவரது மனைவி அஸ்மா பேகத்திடம் ரூ.25 லட்சம் நிவாரண தொகை உள்ளிட்ட 5 பய னாளிகளுக்கு ரூ.26,37,500 மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வரு வாய் அலுவலர் தி.சுப்பிர மணியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) என். சாந்தி, மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் சகுந்தலா, அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.