திருநெல்வேலி, டிச.25- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி மறியல் போராட்டம் நடத்த அரசு போக்குவரத்து கழக ஓய் வூதியர்கள் முடிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர் களுக்கு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பது உட்பட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் வரும் 29ம் தேதி வண்ணார்பேட்டை பணி மனை முன் மறியல் போராட்டம் நடக்கிறது. இதுசம்பந்தமாக மக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாளை யங்கோட்டை மார்க்கெட் பகுதியில் ரேவா பொது செயலாளர் முத்து கிருஷ்ணன் தலை மையில் நடந்தது. இதில் நிர்வாகிகள் வெங்கடா சலம், பழனி, ராஜன், அழகர், சுதந்திரம், நட ராஜன், பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.