districts

img

திருமோகூர் திருவிழாவில் நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தீருதவித் தொகை வழங்கல்

மதுரை,ஜூன் 7-  மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போது  நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 47 நபர்களுக்கு ரூ.5,83,000-க்கான  காசோலையினை மாவட்ட ஆட்சித்தலை வர்  மா.சௌ.சங்கீதா வழங்கினார். மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், ஒத்தக்கடை திருமோகூர் கிராமம் திருவிழாவின் போது நடைபெற்ற சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மதுரை அரசு இராசாசி மருத்தவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வரும் நபர்களை மாவட்ட ஆட்சித்தலை வர் மா.சௌ.சங்கீதா,  நேரில் சந்தித்து தீரு தவித் தொகை வழங்கி ஆறுதல் தெரி வித்தார். மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் பொருட்களுக்கு பொதுப்பணித் துறை, மதுரை மண்டல போக்குவரத்து அலுவலரிடமிருந்து சேதமதிப்பீட்டு அறிக்கை மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முன்மொழிவு வரப்பெற்றதைத் தொடர்ந்து   8 வீடுகள்  சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகை யாக ரூ.14,800-மும், 34 இரண்டு சங்கரங்கள் மற்றும் 1 நான்கு சக்கரங்கள் (மொத்தம் 35 வாகனங்கள்) சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3,18,200–மும், பாதிக்கப்பட்ட 4 நபர்களுக்கு தீருதவித் தொகையாக ரூ.2,50,000–மும் என மொத் தம் 47 நபர்களுக்கு ரூ.5,83,000-க்கான காசோலையினை ஒத்தக்கடை கிழக்கு வரு வாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்  கப்பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.  இந்த நிகழ்வின் போது,  மேலூர் வரு வாய் கோட்டாட்சியர்  பிரிதோஷ் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கோட்டூர் சாமி,  கிழக்கு வருவாய் வட்டாட்சியர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.