districts

திருவில்லிபுத்தூர் நகர்மன்றக் கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 31- திருவில்லிபுத்தூர் நகர்மன்றக் கூட்டம்  திங்கள்கிழமை நகர் மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடை பெற்றது. ஒரு நாள் கூட்டத்தில் மொத்தம் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஏழாவது வார்டு  உறுப்பினர் ராஜா மான்சிங் அவுட்சோர்சிங்  முறையில் டெண்டர் வைத்துத் தீர்மானம் நிறைவேற்றியதன் அடிப்படையில் வந்த  ராமன் அண்ட் கோ நிறுவனம் ஏன் பணியிலி ருந்து விலகியது எனக் கேள்வியெழுப்பி னார். அவுட்சோர்சிங் டெண்டர் ரத்து அதற்குப் பதிலளித்த ஆணையர், டெண்டர் விதிமுறைகளின் படி உரிய நபர்  களைக் கொண்டு பணிகள் செய்யவில்லை பெயருக்கு 35 பேர் 40 பேரை வைத்துக்  கொண்டு பணிகள் செய்தனர் ஆங்காங்கே  குப்பைகள் தேங்கக் கூடிய நிலைமை ஏற்  பட்டது இதையடுத்து அந்நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஒரு வார காலம் அவகாசமும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் டெண் டர் ரத்துச் செய்யப்பட்டுத் தற்காலிகமாக ஏற்கனவே பணிகளைச் செய்து வந்த எக்ஸ்னோரா நிறுவனத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது என்றார். விளம்பரங்களில் புகைப்படம் மிஸ்சிங் இரண்டாவது வார்டு உறுப்பினர் பேசு கையில், ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு  அனைத்து நாளிதழ்களிலும் நகர் நிர்வா கத்தின் சார்பில் விளம்பரம் கொடுத்துள்ளீர்  கள் விளம்பரத்தில் எங்களது புகைப்பட மும் பெயரும் இருந்தால் நல்லது என்றார்.  அதற்குப் பதிலளித்த தலைவர் வரும் காலங்களில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரைத் தொடர்பு கொண்டு அவர் வழிகாட்டலின் அடிப்படையில் உங்க ளது கோரிக்கையை அமல்படுத்துவோம் என்றார். தமிழ்நாடு அரசு திருவில்லிபுத்தூர் நக ராட்சியில் உள்ள 33 வார்டுகளில் உள்ள  வாருகால்களையும் புதிதாகக் கட்டுவ தற்கு 15 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்ற தக வல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நகர்மன்ற துணைத் தலைவர் செல்வ மணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், மேலாளர் பாபு, பொறியாளர் கோமதி சங்கர், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், இளநிலைப் பொறியாளர், குடிநீர் விநி யோக மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.