districts

img

டிச.30 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் திறப்பு

திருச்சிராப்பள்ளி, டிச. 25 - திருச்சி சத்திரம் பேருந்து நிலை யத்தை சுற்றி கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என அதிகமாக இருப்பதால் அங்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாளொன் றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை வந்து செல்கின்றன. எனவே திருச்சி மாநகராட்சியின் சீர்மிகு நகர திட்ட நிதியில் இருந்து ரூ.28  கோடியே 24 லட்சம் மதிப்பீட்டில் நவீன  வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நகர  பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது டிசம்பர் 30 ஆம் தேதி தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட் டுக்கு வருகிறது. இதனை சனிக்கிழமை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேருந்து நிலையத்தின் முதல்  தளத்தில் அமைந்துள்ள கடைகள், ஓட்டல், அண்டர் கிரவுண்டில் அமைக்கப் பட்டுள்ள பார்க்கிங் வசதி உள்ளிட்டவை களை ஆய்வு செய்தார். சத்திரம் பேருந்து நிலையம் 7,029 சதுர மீட்டர்  அளவில் அமைந்துள்ளது.

15 பேருந்து கள் நிற்கும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட் டுள்ளது. தரைத்தளத்தில் 54 கடை களும், பயணிகள் காத்திருப்போர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை  ஆகியவை இடம்பெற்றுள்ளன. முதல் தளத்தில் உணவகம், பொருட் கள் பாதுகாப்பு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அறை, உணவகம் பொருட் கள் பாதுகாப்பு அறை ஆகியவையும் மற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்திரம் புதிய பேருந்து நிலையத் தில் நடத்துநர், ஓட்டுநர்கள் குளிக்க வசதி கள் செய்து தரப்படும். மேலும் சாப்பாடு  வசதி செய்து தரப்படும். எம்.ஆர்.பாளையம் வன உயிரியல் பூங்காவை அடுத்த வருடம் கண்டிப்பாக கொண்டு  வருவோம். குடிசை மாற்று வாரியத்தில்  வடமாநில சிறுவர்கள் வேலை செய்தால்  ஆட்சியர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் டிசம்பர் 30 ஆம் தேதி திருச்சிக்கு வர உள்ளார்.

அன்றைய தினம் புதிய  பேருந்து நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக முதற் கட்டமாக ரூ.400 கோடி அரசாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த பேருந்து நிலையத்தில், கோயம் பேடு மார்க்கெட் மாதிரி சில்லறை மார்க்கெட் கொண்டு வரப்படும். இந்த பேருந்து நிலையத்திற்காக விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது.  ஏற்கனவே அண்ணா சாலையில் இருந்து குடமுருட்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலையை அண்ணா சாலை யில் இருந்து ஜங்ஷன் வரை கொண்டு  செல்ல முடியுமா? என துறை அதிகாரி களை கேட்டுக் கொண்டிருக்கிறேன். கள்ளிக்குடி மார்க்கெட்டை பொருத்த வரை வியாபாரம் நடக்கவில்லை. ஆகை யினால் வியாபாரிகள் அங்கு செல்ல விரும்பவில்லை. அந்த கட்டிடத்தை தவறாக கட்டிவிட்டார்கள். அதற்கு நாம்  என்ன செய்ய முடியும்?  ரூ.80 கோடி செலவு செய்துள்ளதாக சொல்கிறீர்கள். சின்னச்சின்ன அறை களாக கட்டியிருக்கிறார்கள். மாடிக்கு சரக்கு கொண்டு செல்வது சிரமமாக இருக்கும். அந்த கள்ளிக்குடி மார்க் கெட்டை என்ன செய்யலாம் என்று  நல்ல யோசனை இருந்தால் சொல்லுங் கள். வல்லுநர் குழு மூலம் அதனை  எதற்கு பயன்படுத்துவது? என்று பின்னர்  முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.