காஞ்சிபுரம், ஏப்.3- சென்னையில் 2-விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல் வாய் உள்ளிட்ட 13 கிராமங் களை உள்ளடக்கிய பகுதி யில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் குடியிருப்புகள் பாசன கால்வாய் உள்ளிட்டவைகள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு 13 கிராம மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூர் விமான நிலை யம் அறிவிப்பு வெளியானது முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தினந் தோறும் மாலையில் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்ற னர். கிராம மக்க ளின் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர் மேத்தா பட்கர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை நேரடியாக சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இந்நிலையில் ஏகனா புரம் கிராம மக்களின் போராட்டம் ஞாயிறன்று (ஏப்.2) 250- வது நாளை எட்டி யது. இதையொட்டி ஏகனா புரம் கிராமத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற் றது. தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.