பழனியில் சிபிஎம் போராட்டம் பழனி, ஆக.28 பழனியில் காவல் ஆய்வாளர் உதய குமாரை பணியிடை நீக்கம் செய்ய வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிபிஎம் தலைவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று அரா ஜகமாக கைது செய்தனர். பழனி காவல் ஆய்வாளர் உதய குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இயக்கங்களுக்கு எதிராகவும், நகரத்தில் கொடி கட்டினாலும் பொய் வழக்கு போடுவதும், இயக்கங்களை முடக்குவதற்கும் பல்வேறு முயற்சி களை மேற்கொண்டு வந்துள்ளார். மேலும் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். எனவே இவரது சிபிஎம் விரோதப் போக்கைக் கண்டித்தும், இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி கட்சியின் சார்பாக டி.எஸ்.பி. யிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகாரின் மீது டி.எஸ்.பி. எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இவரை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தி திங்களன்று பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக் கப்பட்டுள்ளது என்று கூறி தலை வர்களை டி.எஸ்.பி. கைது செய்தார். ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்ப தற்கு பதிலாக அமைதியாக ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் தலை வர்களிடம் டி.எஸ்.பி. குறுக்கிட்டு, பேசு வதை நிறுத்த வேண்டும் என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், முன்னாள் பழனி நகர்மன்றத் தலைவர் வ.இராஜமாணிக்கம் உள்ளிட்ட தலைவர்களை குண்டுக்கட்டாக தூக் கிச்சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இப்போராட்டத்தில் கட்சியின், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கமலக்கண்ணன், எம்.ராமசாமி, பழனி நகரச் செயலாளர் கே.கந்தசாமி, பழனி ஒன்றியச் செயலாளர் பி. செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலாளர் என்.கனகு, மாவட்டக் குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்ட நூற் றுக்கணக்கானவர்கள் கைது செய் யப்பட்டனர். கண்டனம் இதுதொடர்பாக கட்சியின் மாவட் டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பழனி யில் ஒரு தலைபட்சமாக செயல்படும் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்த்துறை அதி காரிகள் அராஜகமாக நடந்து கொண்டு அமைதியாக போராடிய சிபிஎம் தலை வர்கள் மற்றும் தொண்டர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்திருப்பது வன்மையான கண்ட னத்திற்குரியது. ஜனநாயக விரோத மாக செயல்படும் பழனி காவல் ஆய்வா ளர் உதயகுமார் குறித்து டி.எஸ்.பி. யிடம் புகார் கொடுத்தால் அதன் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஜன நாயக ரீதியாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி யை ரத்து செய்து அதில் பங்கேற்ற தலை வர்கள், தொண்டர்களை அராஜகமாக கைது செய்திருப்பது கண்டிக்கத்தக் கது’’ என்று கூறியுள்ளார். (நநி)