districts

img

போராட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் அலைக்கழிக்கும் பழனி நகர் காவல்துறை

போராட்டங்களுக்கு அனுமதியளிக்காமல் அலைக்கழிக்கும் பழனி நகர் காவல்துறையை கண்டித்து  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  பழனி நகர செயலாளர் தங்கவேல் தலைமையில் பழனி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட செயலாளர் பகத்சிங், மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் உரையாற்றினர்.பழனி நகர தலைவர் காளீஸ்வரி, பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.