பழனி ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப் பள்ளியில், பாலசமுத்திரம் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ. செந்தில்குமார் வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் ஸ்ரீதர், மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா ,பேரூர் செயலாளர் சின்னத்துரை தலைவர் மேனகா ஆனந்தன், துணை தலைவர் சுதாமணி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.