மதுரை, ஜூன். 3- தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் என் ஹெச் 744 (A) என்ற மதுரை ரிங் ரோடு அமைக்கும் பணியானது கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தாமரைப்பட்டி வரை திருச்சி நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் சுமார் 29 கிலோ மீட்டருக்கு 555 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது,இந்த நிலையில் இந்த நெடுஞ்சாலை வரும்பட்சத்தில் மதுரை புறநகர் சுற்றுவட்ட சாலை அனைத்தையும் இணைக்கும் வகையிலும் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த சாலை கட்டுமானம் திட்டமிடப்படுகிறது. அதற்காக பணிகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்த நிலையில் இந்த நெடுஞ்சாலையானது மதுரை வாடிப்பட்டி தொடங்கி அலங்காநல்லூர் பாலமேடு வழியாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது,இந்த சாலை பாலமேடு அருகே வகுத்த மலை என்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் உள்ளது,வனவிலங்குகளை பாதுகாக்க இரண்டு மலைகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை செல்ல திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ,இந்த மாலையின் மேற்பகுதியில் சுமார் 210 மீட்டர் நீளத்தில் வனவிலங்கு பாலம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மதுரை மாவட்ட வனத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர்.இந்நிலையில், இந்த மனுவானது தமிழ்நாடு வனத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கி 2023க்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு இந்த தேசிய நெடுஞ்சாலை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது, வகுத்த மலை வனப்பகுதியில் கரடி, மான், காட்டெருமை, நரி உள்ளிட்ட அரியவகை விலங்குகள் உள்ளன.