ஊராட்சிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு தொழிலாளர் துணை ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டச் செயலாளர் டி.ஜெயபாண்டி, சிஐடியு தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன், சங்க நிர்வாகிகள் பி.மாரிசாமி, என். மதுரைமுத்து, பி. ஈஸ்வரன், டி.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.