சென்னை, மார்ச் 11 - தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற்றது. கவுன்சிலர்கள் ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி பேரூராட்சியின் 8 உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன்மீது விளக்கம் அளிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி அறிக்கை தாக்கல் செய்யாததால், தேர்தல் அதிகாரிக்கு எதிராக தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் வெள்ளியன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் அதிகாரி இளவர சன் நேரில் ஆஜரானார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மார்ச் 26 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடத்த இருப்ப தாக கூறி அறிக்கை தாக்கல் செய்தார். இதன்பின், கடந்த 4ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்த போது, கண்காணிப்பு கேமரா வில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட்டு, விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தேர்தல் அதிகாரிக்கு அவகாசம் வழங்கியுள்ளனர்.