மதுரை, நவ.1- மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்ட பணி கள் குறித்து தமிழக அரசின் மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தலைமையி லான குழுவினர் பல்வேறு பகுதிகளில் நேரடியாக புத னன்று ஆய்வுகளை மேற் கொண்டனர். மதுரை ஆதிதிராவிடர் கல்லூரி மாணவியர் விடுதி, செல்லூர் கண்மாய், தேனூர் தடுப்பணை, கோச்சடை தடுப்பணை, செனாய் நகர் பகுதியில் உள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளி உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர் களிடம் கூறுகையில், தமிழக அரசின் ஆய்வுக்குழுக்கள் சம்பராதயத்திற்காக இல்லை, மதுரை மாவட்டத் தில் பணிகள் ஒரளவு தான் திருப்தியாக உள்ளது. பணி களை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளோம் என்று தமிழக அரசின் மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் கூறினார். ஆய்வில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப் பீட்டுக் குழு சட்டமன்ற உறுப் பினர்கள் ம.சிந்தனை செல்வன் (காட்டுமன்னார் கோயில்), ச.சிவகுமார் (மயி லம்), செல்லூர் கே. ராஜூ (மதுரை மேற்கு), கோ.தள பதி (மதுரை வடக்கு), வி.பி.நாகைமாலி (கீழ்வேளூர்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), ஓ.எஸ்.மணியன் (வேதாரண்யம்) மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.