districts

மதுரை முக்கிய செய்திகள்

எஸ்.சி, எஸ்.டி அரசு பணியாளர்கள் புகார் தெரிவிக்க வாய்ப்பு

விருதுநகர், ஆக.1- அரசுத்துறைகளில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பணியாளர்கள், அலுவலர்கள் ஆகி யோர் பணிபுரியும் இடங்களில் உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்கள் இருந்தால் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியதாவது : விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் சார்பில், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலு வலர்கள், பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடங்க ளில் இட ஒதுக்கீடு விதிப்படி நியமனம் செய்தல் மற்றும்  பங்கேற்பு ஆகியவற்றைக் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் நடத்தப்படும் பற்றாளர் கூட்டமானது ஆகஸ்ட்  10 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட வளர்ச்சி மன்றக்  கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே, விருதுநகர் மாவட்ட அரசுத்துறையில் பணிபுரி யும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணி புரியும் இடங்களில் உள்ள கோரிக்கைள் மற்றும் புகார்கள்,  தனியார் அல்லது பணியாளர் அமைப்புகளின் முறையீடு கள் ஆகியவற்றையும், நேரடியாக மனுவாக அளித்து தங்க ளது குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் புனித செபஸ்தியார் திருவிழா- அன்னதானம்

திண்டுக்கல், ஆக.1- திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் முத்தழகு பட்டியில் புனித செபாஸ்தியார் திருத்தலம் உள்ளது. 350 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் திருவிழா கொண்டா டப்படுவது வழக்கம்.  கடந்த 31 ஆம் தேதி புனித செபஸ்தியார் உருவம்  பொறித்த கொடி ஏற்றப்பட்டு திருவிழா துவங்கியது. 4 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி யான மாபெரும் அன்னதானம் நேற்று இரவு விடிய, விடிய  பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை செபஸ்தியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்று புனிதருக்கு காணிக்கை பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறை வேற்றிக் கொடுத்த செபஸ்தியாருக்கு நேர்த்திக் கடன்  செலுத்தும் விதமாக அரிசி, ஆடு, கோழி, காய்கறிகள், காணிக்கையாக படைத்தனர். 1500ஆடுகள்,2000 கோழி கள், 3 டன் அரிசி, தக்காளி 2 டன், கத்தரிக்காய் 2 டன்,  இஞ்சி 16 மூடை, பூண்டு 400 கிலோ, வெங்காயம் 2.5 டன், ஆகியவைகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கை யாக பெறப்பட்டது. இவற்றை கொண்டு அசைவ அன்னதானம் தயார் செய்யப்பட்டது. இதில் திண்டுக்கல் மதுரை, தேனி, திருச்சி என வெளியூர்களிலிருந்து இருந்து  பல ஆயிரக்கணக்கானோர் ஜாதி, மத பேதமையின்றி அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

கம்பத்தில் புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது 

தேனி, ஆக.1- கம்பத்தில் புகையிலை பொருட்கள் கடத்தியவரை கைது செய்த காவல்துறையினர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ புகையிலை மற்றும் லாரியை பறிமுதல்.செய்தனர். கம்பம் மெட்டு சாலையில் கம்பம் வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது லாரியில் 12 மூடைகளில் மொத்தம் 100 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள்  இருப்ப-து கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியில் இருந்தவரை பிடித்து விசா ரணை மேற்கொண்டனர். விசாரணையில் கம்பம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மஸ்தான் மகன் ஷாஜகான் (வயது 45) என்பதும் வெளிமாவட்டங்களில் இருந்து புகை யிலை பொருட்களை வாங்கி விற்பனைக்காக கொண்டு  வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ கானை கைது செய்தனர்.

இராமநாதபுரத்தில் 850 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

இராமநாதபுரம், ஆக.1-  தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இராமநாதபுரம் செய்யது அம்  மாள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா  மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளா கத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணுசந்தி ரன் தலைமை வகித்தர். இராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், நான்கு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 850 மாணவ,மாணவிகளுக்கு 42 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதி வண்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் வழங்கினர்.  இந்த நிகழ்ச்சியில்,முதன்மை கல்வி  அலுவலர் பாலமுத்து, இராமநாதபுரம் நகர்  மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் ராமநாத புரம் ஒன்றிய சேர்மன் கே.டி.பிரபாகரன், செய்யது அம்மாள் மேல்நிலை தாளாளர் பாபு அப்துல்லா,மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கதிரவன்,வட்டாட்சியர் ஸ்ரீதர் மாவட்ட கல்வி அலுவுலர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பாம்பனில் ஒன்றாம் எண்  புயல் கூண்டு ஏற்றம் 

இராமேஸ்வரம், ஆக.1-  வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாகி வருகிறது. இதனைதொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீன வர்களுக்கு தொலை தூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக  பாம்பன் துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடிக்க  செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கை யுடனும் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோடநாடு வழக்கு தேனியில் ஓபிஎஸ்,  தினகரன் போராட்டம்

தேனி, ஆக.1- கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேனியில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டனர்.  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து  விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேனி பங்களா மேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

சீமான் மீது மதுரை காவல் ஆணையாளரிடம் புகார்

மதுரை, ஆக. 1- பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக இந்திய  தேசிய லீக்கை சேர்ந்த  எஸ். சித்திக் மதுரை காவல்துறை  ஆணையாரிடம் செவ்வாயன்று புகார் மனு அளித்தார்  மனுவில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தா னின் பிள்ளைகள் என இழிவாக பேசிய காணொலி சமூக  வலைத்தளங்களில் பரவலாகி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் பேசிய சீமான்  மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி

அருப்புக்கோட்டை, ஆக.1- அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமி புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (42), தொழிலாளியான இவர் ஆட்டோவில் வெளியே புறப்பட்டார். அருப்புக் கோட்டை-பந்தல்குடி சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அங்குள்ள வேளாண் அலுவலகம் அருகே வந்த போது சாலையில் குறுக்கே திடீரென நாய் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்ப சாமி சம்பவ  இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி  சுந்தரி கொடுத்த புகாரின் பேரில் அருப்புக் கோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

ரூ.3 லட்சம் மதிப்பில் கரும்புகள் எரிந்து நாசம்

சிவகாசி, ஆக.1- சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்க பாண்டியன்(36). இவருக்கு அதே  பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில், கரும்பு சாகு படி செய்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், கரும்பு  பயிர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. எனவே, அக்கம்  பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதமாயின.  இதுகுறித்து திருத்  தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பூக்களின் விலை அதிகரிப்பு 

தூத்துக்குடி, ஆக. 1 தூத்துக்குடி பூச்சந்தைக்கு ஓட்டப்பிடாரம், குலசேகர நல்லூர், பேரூ ரணி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமங்களில் கோவில் திருவிழா நடப்பதால் பூக்களின் தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.