districts

img

மதுரை பெரியார் நிலையத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வு அறை திறப்பு

மதுரை, ஜன. 9- மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்  பேருந்து நிலைய கட்டுமான  பணிகள் நிறைவுற்றுக் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நிலை யில் பேருந்து நிலையம் கட்டு மானப் பணிகளில் பல்வேறு குழப்பம்- குளறுபடி இருந்த தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள், போதிய கழிப்  பறை, குடிநீர் வசதி இல்லை யென என்று தொடர்ந்து புகார் கள் உள்ளது. குறிப்பாக அர சுப் போக்குவரத்துத் தொழி லாளர்களுக்கான ஓய்வு  அறை கட்டப்படவில்லை. இதனால் ஓட்டுநர், நடத்து நர் பராமரிப்புத் தொழிலா ளர்கள். பயணச்சீட்டு ஆய் வாளர்கள் ஓய்வு அறை, உணவு அருந்துவதற்கு வச தியில்லாததால் சாலையில் உணவு அருந்தினர். பேருந்  திற்குள்ளேயே ஓய்வு எடுத்த னர். இதையடுத்து அரசுப் போக்குவரத்து மதுரை (சிஐ டியு) தொழிலாளர் சங்கத்தி னர் மதுரை மக்களவை  உறுப்பினர் சு.வெங்கடேசனி டம் கோரிக்கை வைத்த னர். அவரது தொடர் வலி யுறுத்தலால் மதுரை மாநக ராட்சி நிர்வாகம் போக்கு வரத்துத் தொழிலாளர்களுக் கான ஓய்வு அறையைக் கட்டிக்கொடுத்துள்ளது. அதன் பணிகள் நிறைவுற்றுத் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன், மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்வில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர் பொறியாளர் அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் ஜா.நர சிம்மன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. தெய்வராஜ், செயலாளர் இரா.லெனின், அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி கள் வீ.பிச்சை, ஏ.கனக சுந் தர், பி. எம். அழகர்சாமி உள்  ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.