districts

விருதுநகரில் தோழர்கள் பி.சீனிவாசன், அ.சேகர் நினைவு நூலகம் திறப்பு

விருதுநகர், அக்.,1- விருதுநகரில் தியாகி சந்துரு நினை வகத்தின் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பி.சீனிவாசன்-அ.சேகர் ஆகியோரின் நினவாக நூலகம் மக்கள் பங்கேற்புடன் எழுச்சியுடன் திறக்கப்பட்டது. நிகழ்விற்கு நகர் செயலாளர் எல்.முரு கன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி முன்னிலை  வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலா ளர் ஆர்.முத்துவேலு வரவேற்புரையாற்றி னார். செங்கொடியை மாவட்டச் செயலா ளர் கே.அர்ஜூனன் ஏற்றி வைத்தார். மரக்கன்றை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார் நட்டுவைத்தார். திமுக நகர் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், மதிமுக நிர்வாகி லட்சுமணன், விசிக நகர் நிர்வாகி சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலகத்தை மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். தோழர்  அ.சேகரின் படத்தை மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், பி.சீனிவாசன் படத்தை சமூக ஆர்வலர் எம்.ஊர்காவலன், டாக்டர் அம்பேத்கர் படத்தை மூத்த தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன், தோழர் பி.சீனிவாசராவ் படத்தை மூத்த தோழர் தேனிவசந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். நகர்க்குழு உறுப்பினர் எம்.செல்வம் நன்றி கூறினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம்.தாமஸ், ஏ.குருசாமி, பி.என்.தேவா, அ.விஜயமுருகன், எஸ்.லட்சுமி, வி.முருகன், கே.முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக சின்னமூப்பன்பட்டி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி கள் நடைபெற்றன. வெள்ளூர் கிராமத்திலி ருந்து மேளம் முழங்க சீர்வரிசையாக புத்த கங்களைப் பெண்கள் கொண்டு வந்தனர்.