ஒட்டன்சத்திரம், ஆக.29- திண்டுக்கல் மாவட்டம் இடையக் கோட்டை, ஒட்டன்சத்திரம், கள்ளிமந் தையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகு தியில் அதிகளவில் விவசாயிகள் பயிர் வகைகளை அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். வெங்காயம், கொத்தமல்லி, கத்த ரிக்காய், பீட்ரூட், தக்காளி என அனைத்து வகையான காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகிறது. வருடத்தின் அனைத் துப் பருவங்களிலும் காய்கறிகள் சாகு படி செய்யப்படுவதே இப்பகுதியின் சிறப்பு அம்சம். குறிப்பாக சின்ன வெங்காயம் பல் வேறு கிராமப் பகுதிகளில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. வெங்கா யம் அமோக விளைச்சல் அடைந்துள் ளது. அவை பறிக்கப்பட்டு ஒட்டன்சத்தி ரம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்ச மாக ரூ.150 வரை விற்பனை செய் யப்பட்டது. இந்த நிலையில் திங்க ளன்று சின்ன வெங்காயம் வரத்து கணி சமாக அதிகரித்தாலும், தேவை குறைந் தது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது. இதானல் இரண்டு மாதம் கழித்து விற்பனை செய்துகொள்ளலாம் என்று பல விவசாயிகள் பட்டறை அமைத்து சின்னவெங்காயத்தைப் பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து பெரியகோட்டையைச் சேர்ந்த விவசாயி முருகேசன் கூறு கையில், நான் ஒரு ஏக்கர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்துள்ளேன். நடவு செய்த நாளில் இருந்து 70- முதல் 80 நாட்களில் விளைச்சல் அடைந்து விடும். விதை, உரம், தண்ணீர் பாய்ச்சு வது என ரூ.45 ஆயிரம் வரை செல வாகி உள்ளது. ஆனால் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.35 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்கின்ற னர். விலை வீழ்ச்சியால் வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். வெங்காயம் குறைந்த விலைக்கு விற்கும் போது விவசாயிகளுக்கு ஒன றிய, மாநில அரசுகள் எந்தவிதமான உதவிகளும் செய்யவில்லை. தற் போது தான் சின்ன வெங்காயம் ரூ. 35-க்கும் பெரிய வெங்காயம் ரூ.25- க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த நேரத்தில் ஒன்றிய அரசு வெங்காய ஏற்று மதிக்கு 40 சதவீதம் வரி விதித்துள்ளது கன்னடத்துக்குரியது. ஒன்றிய அரசு உட னடியாக ஏற்றுமதிக்கு விதித்துள்ள வரி விதிப்பை நீக்க வேண்டும்’’ என்று கூறினார்.