districts

img

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்

இடுக்கி, மார்ச் 27- இடுக்கி அருகில் உள்ள மூலமற்றத்தில் தட்டுக் கடையில் உணவு உண்பதில் ஏற்பட்ட தக ராறில் இளைஞர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூடில் ஒருவர் கொல்லப் பட்டார். மற்றொருவர் பலத்த காயத்துடன் தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 11 மணி யளவில் மூலமற்றம் ஏகேஜி சந்திப்பில் நடந்துள்ளது. இதில் கீரித்தோடு கஞ்சிக் குழியைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்து நர் சனல் சாபு என்கிற ஜப்பார் உயிரிழந்துள் ளார். மூலமற்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டு நர் பிரதீப் புஷ்கரன் படுகாயம் அடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய மாவேலி புத்தன் புரத்தில் பிலிப் மார்ட்டினை முட்டம் காவல் துறையினர் கைது செய்தனர். பிலிப் மார்ட்டின், தட்டுக் கடையில் சாப் பிட வந்துள்ளார். உணவு காலியாகிவிட்ட தாக கூறிய கடை உரிமையாளருடன் தகராறு செய்துள்ளார். அங்கு சாப்பிட வந்த சிலரும் கடை உரிமையாளருக்கு ஆதரவாக பேசி யுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்து சென்ற பிலிப் மார்ட்டின், தனது காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து, மாடியில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.  பின்னர் காரில் மூலமற்றம் பகுதிக்கு திரும்பிய பிலிப் மார்ட்டின் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த சனல் சாபு, ஆட்டோ ஓட்டிச் சென்ற பிரதீப் ஆகியோரை சுட்டுள் ளார். இதில் சனல் சாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். இவர்கள் தன்னை பின்தொடர்வ தாக கருதி துப்பாக்கியால் சுட்டதாக காவல் துறையினரிடம் பிலிப் மார்ட்டின் தெரிவித் துள்ளார்.  மேலும் இவர் திருட்டு துப்பாக்கியை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. துப் பாக்கி மீட்கப்பட்டது. கடையின் உரிமை யாளர் சவுமியா கூறுகையில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும் சம்ப வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என் றார்.