ஒட்டன்சத்திரம், ஆக.22- அதிமுக ஒன்றியச் செயலாளரின் கார் ஓட்டுநர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை காவல்துறை யினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் ஒன்றியம் அ.தி.மு.க. ஒன்றிய செய லாளராக இருப்பவர் என்.பி.நடராஜ் இவர் தனது சொந்த ஊரான அம்பிளிக்கையில் நெய் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தேனி மாவட்டத் தைச் சேர்ந்த வடிவேல் என்பவர் பணி யாற்றி வந்தார். வடிவேல் தனது உறவினர் சுரேஷ் (29) என்ற வாலிபரை அழைத்து வந்து அம்பிளிக்கை நெய் தயாரிக்கும் நிறு வனத்தில் ஓட்டுநர் பணியில் சேர்த்து விட்டார். அதிமுக ஒன்றியச் செயலாளர் என்.பி.நடராஜின் காருக்கும் இவர் ஓட்டுநராகச் செல்வார். இந்த நிலையில் சுரேஷ் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதையடுத்து உறவினர் வடிவேல் இறந்த சுரேஷின் உடலை அம்பிளிக்கை மயானத்திற்குக் கொண்டு வந்து இரவோடு இரவாகத் தீ வைத்து உடலை எரித்து விட்டார். சுரேஷ் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அம்பிளிக்கை காவல்துறையில் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தராஜ் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சம்பவம் தொடர்பாகச் சுரேஷின் உறவினர் வடிவேலுவை (55) கைது செய்த னர். சுரேஷின் உடலைக் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட கேரளா பதிவு எண் கொண்ட கார் மற்றும் உடலை எரிக்கப் பழைய டயர்கள் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய சரக்கு வேன் ஆகிய வற்றையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதிமுக ஒன்றியச் செயலாளர் என்.பி.நடராஜிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், தமது நெய் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ 6 லட்சம் வரை சுரேஷ் முறைகேடு செய்துள்ளதாகவும் இதற்காக நடைபெற்ற பஞ்சாயத்தில் ரூ. 3.50 லட்சம் பணத்தைச் சுரேஷ் திரும்பக் கொடுத்துள்ளார். மீதி பணத்திற்குத் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் உள்ள இடத்தை எழுதி வாங்கியதாகவும், இந்தப் பஞ்சாயத்தின்போது தாக்கப்பட்டதில் சுரேஷ் மயங்கி விழுந்தார். ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சுரேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக வும், அதன் பிறகு உறவினர் வடிவேல் சுரே ஷின் உடலை மயானத்தில் எரித்துவிட்ட தாகக் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.