districts

img

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கலக்கும் கழிவுநீர் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

சின்னாளபட்டி,நவ.16-  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலத்துரான்பட்டி ஊரில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் கழிவுநீர்  கலக்கிறது. இதனால் நோய்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டி யார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் சக்திவேல் தெரிவித் துள்ளார். அவர் மேலும் கூறுகையில் , காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வருவது இல்லை. குடிநீரில் சாக்கடை கழிவுநீர்  கலக்கிறது. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. இது பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ளது .ஆனால் பேரூராட்சி நிர்வா கத்திடம் கேட்டால், எங்களுக்கு சம்பந்தமில்லை என்று  ஒதுங்கிக் கொள்கிறார்கள் மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும். இல்லை யெனில் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் முழுவதும் உள்ள பொதுமக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வோம் என்று சக்திவேல் தெரிவித்துள்ளார்.