districts

img

கீழநெட்டூர் நெல் கொள்முதல் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு

சிவகங்கை, மார்ச்.2-  சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி தாலுகா கீழநெட்டூர் நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடம் நெல் கொள் முதல் தொடர்பாக மாவட்ட விநி யோக அலுவலர் ரெத்தினவேலு, வட்டாட்சியர் ஆனந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில், தற் போதுவரை அங்கு 11,200 நெல் மூட்டைகள் கொள்முதல் செய் யப்பட்டு, ஆயிரம் மூட்டைகள் மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்தனர்.  மேலும், கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பான இடத் துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதற்கு உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலா ளரிடம் மாவட்ட விநியோக அலு வலர் ரத்னவேலு தெரிவித்தார்.  ஆனால், நல்லாண்டிபுரம் நெல் கொள்முதல் மையத்தில்  5 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. ஏற்றி செல்ல வாக னங்கள் கிடைக்காததால் தேங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரி வித்தனர். மேலும் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடமி ருந்து ஒரு மூட்டைக்கு ரூ.42 முதல் ரூ.50 வரைக்கும் வசூல் செய்வது நடைபெற்று வருவதாக விவ சாயிகள் தெரிவித்தனர்.  இச்செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன், மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட் டப் பொருளாளர் வீரபாண்டி ஆகி யோர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மண்டல மேலா ளரிடம் புகார் செய்துள்ளனர்.