districts

img

உசிலம்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள் - சிபிஎம் மறியல்

மதுரை, ஆக.22-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரிலிருந்து மொண்டிக்குண்டு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக மொண்டிக்குண்டு, குளத்துப்பட்டி, அய்யன்கோவில்பட்டி, துரைச்சாமிபுரம்புதூர் மற்றும் பாப்பா பட்டி வரை என 10 க்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு செல்லும் பிரதான  சாலையாக இந்த சாலை உள்ளது.  குண்டும் குழியுமான சாலையால் பொது மக்களும்  பள்ளி மாணவ மாணவிகளும் பெரும் அவதிப்பட்டனர்.   இந்த சாலையை சீரமைக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும் எந்தவித நட வடிக்கைகளும் இல்லை.  எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் 8 கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள்  500க்கும் மேற்பட்டோர்  மொண்டிக்குண்டு பிரிவில் உசி லம்பட்டி வத்தலகுண்டு சாலையில் மறி யலில் ஈடுபட்டனர்.   தகவலறிந்து வந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் உத்தப்பநாயக்கணூர் காவல் காவல் துறையினர் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சாலை  மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். விரைவில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்து ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்ந்ததில் 4மாதத்திற்குள் சாலையினை சீர மைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கையெழுத்துயிட்டு உறுதியளித்தனர்.அதனை தொடர்ந்து போராட்டம் தாற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த போராட்டத்திற்க்கு கட்சியின் உசிலம்பட்டி தாலுகாச் செயலாளர் பெ. ராமர் தலைமை வகித்தார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர்கள் செ.முத்து ராணி, வி.பி.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.காசம்மாள், பி. சின்னக்கருப்பன் ஆகியோர் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.