districts

img

சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள் பேரணி

சிவகங்கை, ஜூலை 19- காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி  சிவகங்கையில் சத்துணவு ஊழியர்கள்  பேரணி சென்றனர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம், ஊதிய  உயர்வு, பதவி உயர்வு வழங்க வேண்  டும், ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.  என வலியுறுத்தி பேரணி  நடைபெற்றது. பேரணி சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்காவில் இருந்து சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்  டத் தலைவர் முத்துக்குமார் தலைமை யில் தொடங்கியது. தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்  செயலாளர் செல்வம் பேரணியை தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழி யர் சங்க மாநிலத் துணைத்தலைவர் பேயதேவன், நடராஜன். ரத்தினம், சேது ராமன், பாலசுப்பிரமணியன், மற்றும் பாண்டி, கண்ணதாசன், வீரய்யா, பாக்கி யமேரி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.