நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை பெரியாறு அணை 142 அடியை எட்டுவதில் தாமதம்
தேனி, டிச.17- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத நிலையில் நீர்வரத்து குறைந்து பெரியாறு அணை 142 அடியை எட்டுவதில் தாமதமாகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதி யில் பெய்த கனமழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. 136 அடியை கடந்தவுடன் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரள மாநிலத்திற்கு விடுக்கப்பட்டது. வருகிற டிசம்பர் 31 ஆம் தேதி வரை அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள அனுமதி அளித்துள்ள தால் அதற்கான நடவடிக்கையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்தை பொறுத்து அணையிலிருந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்ற னர். மேலும் 142 அடியில் நீர்மட்டத்தை நிலை நிறுத்த முடிவு செய்துள்ளனர். மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு 743 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் அணை யின் நீர்மட்டம் 142 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள் ளது. சனிக்கிழமை காலை நிலவரப்படி 141.45 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 67.09 அடியாக உள்ளது. அணைக்கு 1269 கனஅடி நீர் வரு கிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1169 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 80 கனஅடி நீர் வரு கிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.84 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
விருதுநகர் சந்தை துவரை, உளுந்தம் பருப்புகளின் விலை திடீர் உயர்வு
விருதுநகர், டிச.17- விருதுநகர் சந்தையில் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்புகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப் பட்டு வருகிறது. அதில், பாமாயில் விலையானது கடந்த வாரத்தை விட சற்று குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலை ரூ.1530க்கு விற்பனை செய்யப் பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.30 குறைந்து ரூ. 1500க்கு விற்பனையானது. மல்லி விலை குறைவு இதேபோல் 40 கிலோ மல்லி விலையானது கடந்த வாரம் ரூ.4500-4700 வரை விற்பனை செய்யப்பட்ட நிலை யில், இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்து தற்போது ரூ.4300-4500 வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு விலை உயர்வு கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை ரூ.9,600-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.400 வரை உயர்ந்து தற்போது குவிண்டால் ஒன்று ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் புதுஸ் லயன் வகை துவரம் பருப்பு கடந்த வாரம் ரூ.10,600-க்கு விற்ற நிலையில் திடீரென ரூ.400 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.11ஆயிரத்திற்கு விற்கப்படு கிறது. இதேபோல் மசூர் பருப்பின் விலை 100 கிலோ ரூ.10,100க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் மூட்டை ஒன்றுக்கு ரூ.100 உயர்ந்து தற்போது ரூ.10,200 க்கு விற்கப்படுகிறது.
உளுந்து விலை உயர்வு
கடந்த வாரம் 100 கிலோ உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை ரூ.10,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலை யில், ரூ.400 உயர்ந்து தற்போது ரூ.11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் தொலி உளுந்தின் விலை கடந்த வாரம் ரூ.9,100க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.9400க்கு விற்கப்படுகிறது. பாசிப் பயறு விலை உயர்வு கடந்த வாரம் பாசிப் பயறு (நாடு) 100 கிலோ ரூ.7,200க்கு விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.200 உயர்வு ஏற்பட்டு தற்போது ரூ.7400க்கு விற்பனை செய்யப்படு கிறது. ஒரே நேரத்தில் துவரை, உளுந்தம் பருப்பு மற்றும் பாசிப் பயறு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு
அருப்புக்கோட்டை, டிச.17- அருப்புக்கோட்டை அருகே உச்சனேந்தல் கிராமத்தில் வீடு புகுந்து 5 பவுன் நகை திருடு போனது குறித்து போலீ சார் விசாரித்து வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே உள்ளது உச்சனேந்தல் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர் பெத்துலெட்சுமி(32). இவரது கணவர் வெளிமாநிலத்தில் வேலை செய்து வரு கிறார். எனவே, தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டில் இரவு தங்கியுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த கைச் சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கட்டனூர் காவல் நிலையத்தில் பெத்து லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.
செல்போன் வாங்கித் தராததால் மாணவர் தற்கொலை
சின்னாளப்பட்டி, டிச.17- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் ஒட்டுபட்டி தெற்கு தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் யோக பிரபு (வயது 18 ). வயது இவர் மைக்கேல் பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தனக்கு செல்போன் வாங்கி தரும்படி பெற்றோரி டம் கேட்டார். அரசு தேர்வு முடிந்த பிறகு வாங்கித் தருவதாக பெற்றோர் கூறினர். இதனால் மனவேதனை யடைந்த யோக பிரபு சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டு,பின்னர் உயிரிழந்தார். இச்சம்ப வம் குறித்து செம்பட்டி காவல் துறையினர் விசாரித்து வரு கின்றனர்.
இன்று முதல் மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்
மதுரை, டிச.17- மதுரை மாநகர காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பக் தர்களுக்கும் மற்றும் கோவில் பகுதிகளில் அமைந்துள்ள வியாபார ஸ்தலங்களில் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு தமி ழக அரசால் கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பழைய சென்டரல் மார்க்கெட் பார்க்கிங் பகுதியில் புதியதாக உருவாக்கப்பட்ட தரை கீழ்தள வாகனநிறுத் தத்தில் 1400 இருசக்கர வாகனங்கள், 110 கார்கள் மற்றும் மேல் தளத்தில் 50 டூரிஸ்ட் வேன் நிறுத்தும் வசதி செயல்முறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் பெரியார் பேருந்து நிலையத் தில் வணிக வளாகம் மற்றும் தரை கீழ்தள வாகன நிறுத்தம் விரைவில் செயல்முறைப் படுத்தப்படஇருப்பதால் மேற்கண்ட தரை தள வாகனநிறுத்தத்தில் 4900 இருசக்கர வாகனங்கள் 370 கார்களை சுற்றுவட்டா ரத்தில் அமைந்துள்ள விடுதிகள் , உணவ கங்கள், வழிபாட்டுத்தளங்கள் மற்றும் வணிகமையங்கள் பயன்பாட்டிற்காக உரு வாக்கப்பட்டுள்ளது .
மதுரை மாநகரில் மேலவெளி வீதி மற் றும் மேல மாரட் , சம்பந்தமூர்த்தி தெரு டவுன்ஹால் ரோடு மற்றும் ரயில்வே நிலை யம் சந்திப்பு ஆகிய சந்திப்புகள் மற்றும் பெரியார் பேருந்து நிலைய நுழைவு வாயி லில் அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை சந்திப்பிலும், நேதாஜி ரோடு திருப்பரங் குன்றம் ரோடு சந்திப்பில் உள்ள வளைவு ஆகிய பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும் பொதுமக்களின் வசதிக்காவும் தேக்கமில்லாத வாகன போக்குவரத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் நிலையில் மதுரை மாநகர காவல் ஆணை யரின் ஆலோசனையின் அடிப்படையில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தலை வர், மாவட்ட சாலை பாதுகாப்பு குழு மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையரின் ஆலோசணைப்படியும் கீழ்கண்ட வாகன போக்குவரத்து செய்வதற்கு உத்தேசிக் கப்பட்டுள்ளது. இந்த ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்தின் சோதனை ஓட்டம் டிசம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற உள் ளது. பொதுமக்களும் வியாபார பெரு மக்களும், பக்தர்களும், சுற்றுலா பய ணிகளும், வாகன பயன்பாட்டாளர்களும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
போக்குவரத்து மாற்றங்களின் விப ரங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக் கும் வகையில் கட்டபொம்மன் சிலை முதல் மேலவெளி வீதி சம்மந்தமூர்த்தி தெரு சந்திப்பு வரை உள்ள சாலையையும் மற்றும் சம்பந்தமூர்த்தி தெரு - வடக்கு வெளிவீதி சந்திப்பில் இருந்து நேதாஜி ரோடு சந்திப்பு வரை உள்ள மேலமாரட் சாலையையும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படு கிறது. ஸ்காட்ரோடு சந்திப்பிலிருந்து கட்ட பொம்மன் சிலை செல்லக்கூடிய அனைத்து வாகன போக்குவரத்தும் சம்பந்தமூர்த்தி தெரு சந்திப்பில் இடது புறமாக திரும்பி மேல மாரட் வீதி வழியாக நேதாஜி ரோடு சென்று இடதுபுறம் திரும்பி அனைத்து வாகனங்களும் திருப்பரங்குன்றம் சாலையில் பயணிக்கலாம் . ரயில்வே நிலையம் செல்ல மேலமாரட் டவுன்ஹால் ரோடு வலதுபுறம் திரும்பி மேலவெளி வீதியினை அடைந்து மீண்டும் வலதுபுறம் திரும்பி அங்கு விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் ரயில்வே நிலை யத்தை அடைய வழிவகை செய்யப்பட்டுள் ளது.
மேலும் மேலமாரட் சாலை வழியாக டவுன்ஹால் ரோடு சந்திப்பை கடந்து நேராக வரும் வாகனங்கள் நேதாஜி சாலையை அடைந்து வலது புறம் திரும்பி யூ.சி. பள்ளி வழியாக ரயில் நிலையத்திற்கோ , ஸ்காட் ரோட்டிற்கோ அல்லது நகரின் வடக்கு பகுதி களுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள் ளது. கட்டபொம்மன் சிலையிலிருந்து ஸ்காட்ரோடு நோக்கி செல்லக்கூடிய வாக னங்கள் ரயில்வே நிலையம் சந்திப்பினை கடந்து வழக்கம்போல் ஸ்காட்ரோடு சந் திப்பு வடக்கு மாசி , வடக்கு வெளி வீதி சந்திப்பு நோக்கி செல்லலாம் . ரயில் நிலை யத்திலிருந்து வெளியே வரும் வாகனங் கள் இடதுபுறமாக திரும்பி வடக்கு பகு திக்கு செல்பவர்கள் வழக்கம்போல் செல்ல லாம். பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வருபவர்கள் மேலவெளி வீதி வழியாக சம்பந்த மூர்த்தி தெரு சந்திப்பில் வலது புறம் ( U Turn ) திரும்பி மேலமாரட் வழியாக நேதாஜி சாலை மற்றும் பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லலாம். அல்லது டவுன் ஹால் ரோட்டில் இடது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கோ, வடக்கு மாசி வீதிக்கு அல்லது நகரின் பிற பகுதி களுக்கு செல்லலாம் . இந்த போக்கு வரத்து மாற்றத்தினால் குட்செட் தெருமேல மாசி வீதி சந்திப்பு . சம்மந்தமூர்த்தி தெரு மேலமாசிவீதி சந்திப்பு , இரயில் நிலையம் சந்திப்பு ஆகியவைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள ளது.
கோவில் சொத்துக்களை அபகரிக்க மதவெறிக் கும்பல் முயற்சி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை
சென்னை, டிச.17- கோவில் சொத்துக்களை மதவெறிக் கும்பல் அபகரிக்க ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறினார். நியாய வாடகை நிர்ணயக்குழு பரிந்துரை யை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு கோவில் மனையில் குடி யிருப்போர் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு அரை நிர்வாண போராட்டம் சனிக்கிழமை (டிச. 17) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசுகை யில், ‘‘கோயில்களும், அதன் சொத்துக் களும் அரசின் கையில் இருக்கும் வரை தான் நாமெல்லாம் அங்கே குடியிருக்க முடி யும்’’ என்றார். மதவெறி சக்திகள் கோயில்களை தங்க ளுடைய கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்
என்ற கோரிக்கைக்கு எதிராகவும் நாம் போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தங்களி டம் ஒப்படையுங்கள் என்று மதவெறிக் கும் பல் கோருவது சட்டவிரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது. மாநில அரசின் உரி மையில் அத்துமீறி தலையிடுகிறார்கள். எனவே இதற்கெதிராக வலுவான குரலை எழுப்ப வேண்டும் என்றும் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏக்கர் கணக்கில் இடங்களை கொடுங்கள் என்று கேட்கவில்லை. பல ஆண்டுகாலமாக குடியிருக்கும் 200 சதுர அடி, 400 சதுர அடி இடங்களைத்தான் கேட்கிறோம். இந்த நிலத்தில் குடியிருக்கும் எழை எளிய மக்க ளுக்கு வாடகையை உயர்த்தக்கூடாது என் றும் கோயிலுக்கு சொந்தமான இடத்தை இல வசமாக கேட்கவில்லை. அதற்கு ஒரு நியா யமான விலை நிர்ணயித்து தவணை முறை யில் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா கொடுங்கள் என்றுதான் கேட்கி றோம். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாநிலத் தலைவர் வி.அ.பாலசுப்பிர மணியன், பொருளாளர் எஸ்.ஏழுமலை ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் நா.பெரியசாமி, விசிக தலை வர் தொல்.திருமாவளவன், பொன்.கிருஷ்ணமூர்த்தி (காங்.), இரா.அந்திரி தாஸ் (மதிமுக) ஆகியோரும் பேசினர்.
கேம்பஸ் இண்டர்வியூ நடத்தும் நிறுவனங்களின் பின்புலத்தை ஆராய்ந்து அனுமதி வழங்கிடுக!
உயர்நீதிமன்றம் உத்தரவு
உயர்நீதிமன்றம் உத்தரவு மதுரை, டிச.17- தமிழக கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர் வியூ நடத்தும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறு வனங்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறு வனத்தின் பின்புலத்தினை ஆராயந்து அனு மதி வழங்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்டம் அர வக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜவஹர்லால் நேரு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் படிப்பை முடித்து 3 லட்சம் மாணவர்கள் வெளியேறுகின்றனர். அவ்வாறு கல்லூரிகளில் இருந்து வெளியே வரும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பில் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் முகாம் நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுக்கின்ற னர். இதை தடுக்கும் வகையில் தொழில் தகுதித் தேர்வை நடத்தி அதன் மூலம் பன் னாட்டு நிறுவனங்களில் அனைவருக்கும் சம மான வேலைவாய்ப்பை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாதம் ஆகியோர் அமர்வு முன்பு சனிக்கிழமை யன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறு கையில், இந்திய அரசியலமைப்பு மாநில அரசுகள் மக்களுக்கு வேலை வாய்ப்பு உரு வாக்குவதை உறுதி செய்ய வேண்டும். மாண வர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்ப தற்கான தகுதிகளை மேம்படுத்துவதற்கு அரசு பாடுபட வேண்டும். மேலும் கல்வி நிறு வனங்களில் தொழில் அதிபர்கள் மற்றும் பன் னாட்டு நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி ஆட்களை தேர்வு செய்கின்றனர். இத னால் வேலை வாய்ப்பின்மை குறைக்கப்படு கிறது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. ஆனால் வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவ னங்கள் அவர்கள் நிறுவனத்திற்கு தேவை யான நபர்களை தேர்வு செய்வதற்காக அவர்களே சில நிபந்தனைகளை வகுத்து அதன் அடிப்படையிலேயே வேலை ஆட் களை தேர்வு செய்கின்றனர். கேம்பஸ் இன்டர் வியூவில் அனைவரையும் சமமாக நடத்து வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுக்கவில்லை.எனவே இந்த நீதிமன்றம் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ளும் இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்தபட்சம் கடந்த மூன்று ஆண்டுகள் அந்த நிறுவனத்தின் பின்புலத்தினை ஆராய வேண்டும் .அப்படி இல்லாத நிறுவனங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் அனுமதி வழங்கக் கூடாது. இத்தகைய நடைமுறைகள் மாணவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் பணி யமர்த்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்த னைகளை கடைப்பிடிக்கும் சூழல் உரு வாகும் என தெரிவித்து வழக்கினை முடித்து வைத்தனர்.
புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
கடமலைக்குண்டு, டிச.17- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே தேவ ராஜ்நகர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்-ரம்யா தம்பதிக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி கடமலைக் குண்டு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 12 ஆம் தேதி பாலூத்து கிராமத்தில் உள்ள ரம்யாவின் வீட்டில் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரம்யா மற்றும் அவரது பெற்றோர்கள் யாருக்கும் தக வல் தெரிவிக்காமல் குழந்தையின் உடலை அவர் களது வீட்டின் அருகே உள்ள ஓடைப்பகுதியில் புதைத்தனர். கடந்த வாரம் பிரசவ கால பின் கவனிப்புகள் பணிக் காக ரம்யாவின் வீட்டிற்கு அரசு மருத்துவமனை செவி லியர் சென்றிருந்த போது குழந்தை இறந்து புதைக் கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக செவிலி யர் அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி கடந்த 2 நாட்க ளாக பாலூத்து கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் நேற்று முன்தினம் குழந்தை இறந்ததில் சந்தேகம் இருப்ப தாகக் கூறி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சனிக் கிழமை ஆண்டிபட்டி தாசில்தார் சுந்தர்லால், கட மலைக்குண்டு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகி யோர் முன்னிலையில் தேனி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவக்குழுவினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்பு மாதிரிகள் மதுரை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.