districts

img

இராமேஸ்வரத்திற்கு புதிய ஆட்டோ பர்மிட்டுகள் வழங்கக் கூடாது

ஆட்டோ சங்கம் ஆர்ப்பாட்டம் இராமேஸ்வரம், செப்.19- இராமேஸ்வரத்தில் புதிய ஆட்டோக் களுக்கான அனுமதிகளை (பர்மிட்டுகள்) வழங்கக் கூடாது என வலியுறுத்தி அனைத்து ஆட்டோ சங்கத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணைத் தலைவர் என்.பி. செந்தில் தலைமை வகித்தார். ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலா ளர் எம்.சிவாஜி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் வி.பாஸ்கரன், டி.ராமச்சந்திர பாபு, இராமேஸ்வரம் சிஐடியு ஆட்டோ சங்க செயலாளர் சாந்தகுமார், ஏஐடியுசி  சங்கம் சார்பில் சி.ஆர்.செந்தில்வேல் உட்பட 500-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கடுமையான போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் திண றும் இராமேஸ்வரத்திற்கு புதிய ஆட்டோ  பர்மிட்டுகள் வழங்கப்பட்டால், மேலும்  கடுமையான போக்குவரத்து நெருக்கடி யை சந்திக்கும் என்பதால், சாலைகள் விரி வாக்கப் பணிகளை முதலில் அரசு நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டன. மேலும் வெளியூர் பர்மிட்டுகள் இராமேஸ்வரத்தில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி,  மாவட்ட ஆட்சியரிடமும், வட்டார போக்கு வரத்து அலுவலரிடமும் மனு அளிக்கப்பட் டது.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மீண்டும் செப்டம்பர் 25 அன்று  குடும்பத்தோடு முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.