தூத்துக்குடி, மார்ச் 20- தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கனிமொழி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மங்களாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங் கன்வாடி கட்டிடத்தை கனி மொழி கருணாநிதி எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அத னைத் தொடர்ந்து விவிடி பூங்கா, வரதராஜபுரம் மற்றும் திரேஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணை யர் சாருஸ்ரீ, மாமன்ற உறுப்பினர் சோமசுந்தரி மற்றும் அரசு அதி காரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.