மதுரை, ஆக.24- மதுரையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஆளுநரின் அதிகாரப் போக்கை கண்டித்தும் மதுரை மாவட்ட திமுக இளை ஞர் அணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்டச் செய லாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை யில் உண்ணாவிரத அறப்போராட்டம் அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் வியாழனன்று நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பி னர் பொன்.முத்துராமலிங்கம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு, மேயர் வ.இந்திராணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ‘இந்தியா கூட்டணி’யின் சார்பில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னருமான சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முருகன், மதிமுக சட்ட மன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், காங்கி ரஸ் மாவட்டச் செயலாளர் மாமன்ற உறுப்பி னர் வி.கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா.நரசிம்மன், டி.செல்வா, மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல் வடக்கு - 1ஆம் பகுதிக்குழு செயலாளர் கோட்டைசாமி,உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனை
போராட்டத்தின்போது, சு.வெங்கடேசன் எம்.பி., பேசுகையில், ‘‘நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகம் விடாது குரல் எழுப்பி வரு கிறது. நீட் தேர்வால் எழுந்து வரும் தொடர் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகின்றோம். இது திமுகவின் பிரச்சனை அல்ல; அல்லது திமுகவின் கூட்டணி கட்சிகளின் பிரச்சனை அல்ல; இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரச்சனை. அடுத்த தலைமுறை சார்ந்த பிரச்சனை. எனவேதான் நீட் தேர்வுக்கு எதி ராக தொடர்ந்து தமிழகம் குரல் கொடுத்து வருகிறது’’ என்றார். நீட் தேர்வு என்பது திரிசூலத்தைப் போல. அதன் ஒரு முனை மாநில உரிமையையும், மாநில கல்வி உரிமையையும் குத்தி கிழிக்கி றது. இன்னொரு முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை முன்னெடுக்கிறது. இன்னொரு முனை மாணவர்களின் தன்னம்பிக்கையை கெடுத்து தற்கொலைக்கு தள்ளுகிறது எனக் குறிப்பிட்ட அவர், ‘‘இன்றைக்கு 23 மாணவர்களை இழந்து பெற்றோர்கள் தவிக்கின்றார்கள். ஆனால், ‘ஒரே கல்வி; ஒரே தேர்வு’ என்று பாஜக சொல்கிறது. இது உண்மை அல்ல; இந்தியாவில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம் நடக்கின்றது. ஆனால், ஒரே பாடத்திட்டத் தின் மூலம் இருக்கக்கூடிய கல்வி நிறுவ னங்களில் ஒரே தேர்வாக நடக்கவில்லை. சிபிஎஸ்இ கல்வி திட்டத்தின் கீழ் இந்தியா 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து சென்னை ஒரு மண்டலம், மும்பை, தில்லி என்று 5 மண்டலங்களாக பிரித்துள்ளார்கள்.
இந்த ஐந்து மண்டலங்களுக்கும் ஒரே வித மான தேர்வு இல்லை. வெவ்வேறு கேள் வித்தாள்கள் வழங்கப்படுகின்றன. 5 வித மான தேர்வு முறை உள்ளது. ஆனால் நீட் என்ற தேர்வில் மட்டும் இந்தியா முழுவதும் ஒரே கேள்வித்தாள்களை கொடுத்து ஒன்றிய அரசு எழுதச் சொல்கிறது எனவும் விவ ரித்தார். ‘‘நீட் மசோதாவிற்கு எதிராக நான் கையெ ழுத்தே போட மாட்டேன் என்று ஆளுநர் சொல்வதும் அதற்கு ஆதரவாக உள்துறை அமைச்சகம் சொல்வதும் குடியரசு தலை வர் நான் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டேன் என்று சொல்வதும் என்று ஒட்டுமொத்தமாக தமிழகத்தையே வஞ்சிக்கின்ற ஒரு திட்ட மிட்ட ஏற்பாடு. இந்தியா முழுவதும் உள்ள நீட் பயிற்சி மையங்கள் மாபியாக்களின் கூடா ரமாக உள்ளது. இன்றைக்கு யுபிஎஸ்சி தேர்வுக்கு பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டும் கொத்துக்கொத்தாக தேர்ச்சி பெறுவதும், சாதாரண மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் தவிப்பதும் இதற்குப் பின்னால் மிகப் பெரும் சதி நடந்து கொண்டிருக்கின்றது’’ என்றும் சு.வெங்க டேசன் சுட்டிக்காட்டினார். மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் நீட் கொடுமைக்கு எதிராக ஒற்றை வார்த்தை கூட அதிமுக நிர்வாகிகள் பேச வில்லை. தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிக்காதது பற்றி யும் இவர்கள் பேசவில்லை என்றும் அவர் சாடினார். (ந.நி)